கோழிக்கோடு, நவ.10- கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள வளாகங்கள் மீண்டும் சிவந்தன. கல்லூரி பேரவை தேர்தல் நடந்த 174 கல்லூரிகளில் 131இல் இந்திய மாணவர் சங்கம் வெற்றி பெற்றது. கேரள கல்வி வளாகங்களில் மாணவர் நெஞ்சங்களில் இந்திய மாணவர் சங்கம் ஆதிக்கம் செலுத்துகிறது. எப்போதும் மாணவர்களின் பக்கம் நிற்கும் இயக்கத்தை கல்லூரிகள் உணர்ந்துள்ளன. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள 27 கல்லூரிகளில் 25 கல்லூரிகளிலும், பாலக்காட்டில் 33இல் 30 கல்லூரிகளிலும், கோழிக்கோடு 55இல் 45, மலப்புரத்தில் 49இல் 24 கல்லூரிகளிலும், வயநாட்டில் 10இல் 7 கல்லூரிகளிலும் இந்திய மாணவர் சங்கம் வெற்றிவாகை சூடியுள்ளது. கோழிக்கோடு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற துறைவாரியான மாணவர் சங்கத் தேர்தலிலும் இந்திய மாணவர் சங்கம் அமோக வெற்றி பெற்றது. கடந்த ஆண்டில் வெற்றிபெற முடியாத இரிஞ்ஞாலக்குடா கிறிஸ்து, செயின்ட் மேரிஸ் கல்லூரி பத்தேரி, கொடுவள்ளி சி.எச்.முஹம்மது கோயா நினைவு அரசு கல்லூரிகளில் இம்முறை இந்திய மாணவர் சங்கம் வெற்றி பெற்றது. திரிதாலா அரசுக் கல்லூரி, செறுபுளாசேரி சிசிஎஸ்டி கல்லூரி, அயிலூர் ஐஎச்ஆர்டிகல்லூரி, மங்கடா அரசு கல்லூரி, இக்மியா கல்லூரி வண்டூர் மற்றும் பிற கல்லூரிகள் இந்திய மாணவர் சங்கம் மீண்டும் வெற்றி பெற்றது.
மாணவர்கள் கொடுத்த அங்கீகாரம்
கோழிக்கோடு பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நடந்த சங்கத் தேர்தல்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்எப்ஐ கேரள மாநில செயற்குழு சார்பில் பாராட்டு விழா நடந்தது. இது கடந்த காலங்களில் மாணவர்கள் செய்த நற்செயல்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகும் என தலைவர்கள் தெரிவித்தனர். கல்லூரிகளை வகுப்புவாதம் வேரூன்றிய இடங்களாக மாற்ற வலதுசாரி மாணவர் அமைப்புகள் கடுமையாக முயற்சித்து வரும் போது, ‘சமவாய்ப்புக்கான அரசியலை முன்னெடுத்து’ தேர்தலை எதிர்கொண்டது இந்திய மாணவர் சங்கம் . அமைப்பு அடிப்படையில் தேர்தல் நடந்த 174 கல்லூரிகளில் 131 -ல்இந்திய மாணவர் சங்கம் வெற்றி பெற்றது. வலதுசாரி அரசியல் அமைப்புகளின் பொய்ப் பிரச்சாரம், வன்முறை மற்றும் ஊடக விசாரணை ஆகியவற்றின் மீது மாணவர்களின் தீர்ப்பு உள்ளது. இந்திய மாணவர் சங்கத்துக்கு வலுவான வெற்றியை தேடித்தந்த மாணவர்களை மாநிலத் தலைவர் கே.அனுஸ்ரீ, செயலாளர் பி.எம்.அர்ஷா ஆகியோர் பாராட்டினர்.
மலப்புரம் அரசு பெண்கள் கல்லூரியில் நடந்த சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய மாணவர் சங்க ஊழியர்கள் தலைவி என். அமீஷாவை தூக்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.