states

img

வயநாட்டில் நெகிழ்ச்சி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண் ணிக்கை 420-ஐ நெருங்கி யுள்ள நிலையில், காணாமல் போன 150 பேரை மீட்கும் பணி தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. ராணுவம், கேரள காவல்துறை, மாநில மற்றும் மீட்புப்படையினர் உள்ளிட்டோர் தொ டர்ச்சியாக 11 நாட்களாக மீட்புப்பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிலச்சரிவில் காணாமல் போனவர்களின் உற வினர்களும் மீட்புப் பணியில் கள மிறங்கியுள்ளனர். முண்டக்கையில் இருந்து உயிர் தப்பியவர்களில் பலர் வெள்ளிக்கிழமையன்று முதல் சூரல்மலையில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் முற்றிலும் அழிந்து போன புஞ்சரி மட்டம் கிராமத்தில் உயிர்தப்பிய பரக்களம் மோகனன் காணாமல் தனது 6 உறவினர்களை மீட்க, மீட்புப் பணிக்குழுவில் இணைந்துள்ளார். 

மீட்புப்பணியில் ஒவ்வொரு அடியும் வலி நிறைந்தது

மீட்புப்பணியின் பொழுது பரக்க ளம் மோகனன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,”எனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை காண வில்லை. அவர்களை தேடி நானும் மீட்புப்பணியில் இணைந்துள்ளேன். மீட்புப்பணியின் போது நான் வைக்கும் ஒவ்வொரு காலடியிலும்  நிலச்சரிவில் அடித்துச் சென்றவர்க ளின் அழுகுரல் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. நானும் எனது குடும்பத்தினரும் புஞ்சரிமட்டம் சந்திப்பில் வசித்து வந்தோம். என் கண் முன்பு இருந்த 100க்கும் மேற் பட்ட வீடுகள் இன்று இங்கில்லை. எதிரே உள்ள வீட்டில், என் தந்தை யின் சகோதரி தாயிக்குட்டி அம்மாவை யும், அவள் குடும்பத்தையும் சரிந்து வந்த நிலம் விழுங்குவதை நேரடியாக பார்த்தேன். நான் உயிருடன் தப்பித் தாலும், வாழ்க்கையில் இருந்த மகிழ்ச்சியெல்லாம் அன்றிரவு பறிக்கப்பட்டது. மீண்டும் இங்கு வர பயமாக இருந்தது. அச்சத்தை போக்கவே இந்த தேடுதல் வேட்டை யில் பங்கேற்க வந்துள்ளேன்” என மோகனன் கூறினார். 

மோகனனை போல உறவினர்க ளை இழந்த பல்வேறு நபர்களும்  மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்ற னர் என்பது குறிப்பிடத்தக்கது.