திருவனந்தபுரம், மார்ச் 14- கேரளத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சாலக்குடி மக்களவைத் தொகுதி எல்டிஎப் வேட்பாளர் பேராசிரியர். சி.ரவீந்திரநாத்துக்கு இயற்கைச் சீற்றத்திலும் நெருக்கடியான வாழ்க்கை நடத்தும் கைபமங்கலம் பகுதி மீனவ மக்கள், அன்பான வரவேற்பு அளித்தனர். புனர்கேஹம் திட்டத்தில் வீடு பெற்றவர்கள், புதிய படகு பெற்றவர்கள், தீர மைத்ரி திட்டத்தின் மூலம் வாழ்க்கையை மாற்றியமைத்தவர்கள் இவர்கள். தங்களது வாழ்வுக்கு வளம் சேர்த்த இடது ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் அப்பகுதிக்கு புதனன்று (மார்ச் 13) வந்தபோது மீனவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை கேட்டறிந்தார். அவற்றுக்கு தீர்வு காண்பதில் முன்னணியில் இருப்போம் என உறுதியளித்தார்.
எர்ணாகுளம்
எல்.டி.எப் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆசிரியர் கே.ஜே.ஷைன், அறிவுப் பொருளாதாரத்தின் முன்னோடியாகத் தயாராகி வரும் தொழில்நுட்பக் கல்வித் துறை மாணவர்களுடன் உரையாடினார். களமசேரி அரசு ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் மற்றும் குசாட் வளாகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நட்புறவையும் ஆதரவையும் புதனன்று (மார்ச் 13) பகிர்ந்து கொண்டார்.