states

img

அறிவை ஏகபோகமாக்கும் உலகளாவிய முயற்சி

திருவனந்தபுரம், ஜுன் 20- உலகம் முழுவதும் அறிவை  ஏகபோகமாக்க முயற்சி நடக் கிறது. அனைத்து கல்விச் செயல் பாடுகளிலும், ஆய்வுகளிலும் இதைக் காணலாம். என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். மாநில நூலகப் பேரவை மற்றும் பி.என்.பணிக்கர் அறக் கட்டளை இணைந்து நடத்திய வாசிப்பு நாள் விழாவில் முதல் வர் தனது தொடக்க உரையில், மேலும் கூறியதாவது: எல்.டி.எப் அரசாங்கம் அறிவை சமூக முன் னேற்றத்திற்கும் பொது நல னுக்கும் எவ்வாறு பயன்படுத்து வது என்ற தொலைநோக்கு பார்வையை முன்வைக்கி றது. நூலகங்கள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். அறி வியல் விழிப்புணர்வை வளர்க் கவும், இனவெறியை எதிர்த்துப் போராடவும், மதச்சார்பற்ற விழுமியங்களை நிலைநிறுத்த வும் அறிவைப் பயன்படுத்த லாம். நாட்டின் தற்போதைய சூழலில் இது பொருத்தமானது. கல்வியறிவு நடவடிக்கைகளின் பார்வையுடன், அறிவை ஜனநா யகப்படுத்துவதையும் மதச்சார் பற்ற சமூகத்தை கட்டியெழுப்பு வதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதன் மூலம் நாம் முன்னேற முடியும். வாசிப்புக்கு இறப்பில்லை, மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய தலைமுறை தடிமனான  புத்தகங்களுக்கு பதிலாக மின் னணு வாசிப்பை விரும்புகிறது. இதை உணர்ந்து, நவீன தொ ழில்நுட்பங்களைப் பயன் படுத்தி வாசிப்பை மேலும் வளர்க்க வேண்டும் என்றார் முதல்வர். பள்ளித் திட்டங்களில் வாசிப்பும் சேர்க்கப்படும் என்று நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்தார். பிஎன் பணிக்கர் அறக் கட்டளை தலைவர் பன்னியன் ரவீந்திரன், தலைமைச் செயலா ளர் டாக்டர். வி.பி.ஜாய், பேரா சிரியர். பி.ஜே. குரியன் உள் ளிட்டோர் பேசினர்.