திருவனந்தபுரம் (எம்.சி.ஜோசபைன் நகர்),ஜன.7- அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13ஆவது தேசிய மாநாட்டை பிரபல நடனக் கலைஞ ரும், மனித உரிமை ஆர்வலரும், கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தருமான மல்லிகா சாராபாய் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மநுநீதி மனப் பான்மையை எதிர்த்துப் போராட மக ளிர் அமைப்புகள் முன்வர வேண் டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அவர் பேசுகையில், கோயில்களி லும், தேவாலயங்களிலும் அல்லா மல், ஜனநாயக வெளியில் பல பெண் களை ஒன்றாகப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். லட்சக்கணக்கான இந்தியப் பெண்களின் மனதில் மனுஸ்மிருதி இன்னும் வாழ்கிறது. பெண்களின் மனநிலையை மாற்றுவது பெரிய சவாலாக உள்ளது. இந்த மனுஸ் மிருதி மனோபாவத்தை எதிர்த்து மாதர் சங்கம் தனது போராட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். நமது தேசம் வசுதெய்வ குடும்பகம் (உல கில் உள்ள அனைவரும் ஒரு குடும் பம்) என்ற கருத்தை முன் வைக்கிறது. ஆனால், சொந்த மருமகளைக் கூட சமமாகப் பார்க்க முடியவில்லை என் றால், அந்தக் கருத்து பொருளற் றது.
‘லவ் ஜிகாத்’ பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருந்தால், நான் இருந்திருக்க மாட்டேன். எனது தாத்தா பாட்டி பின்னர் தந்தை மற்றும் அம்மா ஒன்றாக இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று லவ் ஜிகாத் போல பிரச்சாரம் வலுவாக உள்ளது. நான் கடந்த 20 ஆண்டுகளாக குஜராத்தில் வசிக்கும் மூச்சுத்திணறல் உள்ள வள். ஆனாலும் மனிதாபிமானத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமா கவே அவர்களுக்கெதிராகப் பேச முடிகிறது. வறுமை மற்றும் பாகுபாடு இல் லாத நீதியான உலகத்தை நாங்கள் கனவு காண்கிறோம். அதற்காக போராடவே நாங்கள் இங்கு வந் துள்ளோம். மற்றவர்களை சமமாகப் பார்க்கும் நிலை இல்லாமல், மதச் சார்பின்மை மற்றும் சமத்துவத்தை வளர்க்காவிட்டால், அந்த உல கத்தை படைக்கும் உந்துசக்தியாக நம்மால் இருக்க முடியாது என்று அவர் கூறினார்.
துரோகி மோடி...
“துரோகி மோடி... உனது கூட்டையும் படுக்கையையும் எடுத்துக் கொண்டு போ... எதிர்காலம் விவசாயிகளின் பெண் களிடம்”. மோடி அரசை மண்டியிட வைத்த விவசாயிகள் தில்லி போராட்டக் களத்தில் ஒலித்த இடிமுழக்க புரட்சிப் பாடல் இது. ‘மோடி பேமன் (துரோகி மோடி)’ பாடல் அதே உற்சாகம் குறை யாமல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய மாநாட்டு அரங்கை சிலிர்க்க வைத்தது. அரியானா மாநிலம் சேனாபதி மாவட் டத்தைச் சேர்ந்த ஷீலா புட்டானா (60) மற்றும் அவரது குழுவினர் போராட்டத் தில் இந்த பாடலும், மெட்டுக்களும் அங்கு வந்தவர்களை வரவேற்றன. அரியானா வில் விவசாயிகள் போராட்டத்தை முன் னின்று நடத்தியவர் ஷீலா புட்டானா. அவ ரது முழக்கங்களும் பாடல்களும் இடை விடாமல் தொடர்ந்தன. அதில் ஒன்றுதான் ‘மோடி பேமன்’ என்ற புரட்சிப் பாடல். ஷீலா மரபுவழி நடைமுறை சவால் களை கடந்து பொது வெளிக்கு வந்த வர். முகமூடியுடன்கூடிய ஆடையை (குங்காட்) தவிர்த்தார். பெண்களை ஒருங்கிணைத்து, மின்சாரம், தண்ணீ ருக்காக வீதியில் இறங்கினார். வன்முறை கும்பல் தாக்குதலாலும் பொய் வழக்கு களாலும் பாதிக்கப்பட்டவர். சேனாபதி மக ளிர் சங்கத்தின் மாவட்டத் தலைவராக வும், கிசான் சபா மாவட்டக் குழு உறுப்பி னராகவும் உள்ளார்.
இடதுசாரிகள் மவுனியாக மாட்டார்கள்: டீஸ்டா செதல்வாத் பேச்சு
நகர்), ஜன.7- இடதுசாரிகள் ஏற்றத்தாழ்வு களுக்கு எதிராகப் பேசுவார்கள். அவர்கள் ஒருபோதும் மவுனமாக இருக்க மாட்டார்கள் என்று சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாத் கூறி னார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13 ஆவது அகில இந்திய மாநாட்டில் வாழ்த்துரை வழங்கிய டீஸ்டா மேலும் பேசுகையில், வெறுப்புப் பேச்சு மற்றும் எழுத்துக்கு எதிராக புகார் தெரிவித்து, குரல் எழுப்புவதோடு சட்டத்தையும் அணுக வேண்டும் என்றார். உபா (யுஏபிஏ) மற்றும் குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்றும் டீஸ்டா கூறினார். என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த கேரளா உள்ளிட்ட அரசு களை அவர் பாராட்டினார். மனித உரிமைகள் அல்லது பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது போன்ற போராட் டங்களில் எப்போதும் உடன் இருப்பேன் என்றும் அவர் உறுதி யளித்தார்.