states

img

திருச்சூரில் பாரதிய ஜனதா வெற்றியை குறைத்து மதிப்பிடக்கூடாது: பினராயி விஜயன்

திருச்சூரில் பாஜக வெற்றியை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அனைவரும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்றும் கேரள  முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.  திருவனந்தபுரத்தில் சசி தரூரின் வெற்றி யையும், திருச்சூரில் சுரேஷ் கோபியின் வெற்றியையும் சமன்படுத்தக்கூடாது; இரண்டை யும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் கூறினார். கேரள சட்டப்பேரவை ஜுன் 12 புதனன்று கூடியது. பொது நிர்வாக நிதிக் கோரிக்கை விவா தங்களுக்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன் மேலும் பேசியதாவது: “கேரளத்தில் மக்களவைத் தேர்தலில் யுடிஎப்-க்கும் எல்டிஎப்-க்கும் இடையே நேரடி மோதல் நடந்தது. இருந்தபோதிலும் பாஜக எவ்வாறு வெற்றி பெற்றது என்பதை ஆராய வேண்டும். 2019 தேர்தலில் பெற்றதைவிட திருச்சூரில் 10 சதவிகித வாக்குகளை யுடிஎப் இழந்துள்ளது. 4,15,000 வாக்குகளில் இருந்து 3,28,000 ஆக யுடிஎப் வாக்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில் எல்டிஎப்க்கு 16,196 வாக்குகள் அதிகரித்துள்ளது. 2019இல்  திருச்சூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் யுடிஎப் பெற்ற வாக்குகளை இம்முறை தக்கவைக்க வில்லை. மணலூரில் 63,420 ஆக இருந்த வாக்குகள் 50,897 ஆக குறைந்தது. ஒல்லூரில் 63,000 லிருந்து 47,000, நாட்டிகையில் 52,000 லிருந்து 38,000, இரிஞ்ஞாலக்குடாவில் 57,000 லிருந்து 46,000, புதுக்காட்டில் 56,000 லிருந்து 42,000 என யுடிஎப் வாக்குகள் குறைந்துள்ளது. யுடிஎப் உடன் இருந்த சில சக்திகளின் தலைவர்களை, பாஜக தனக்கு ஆதரவாக மாற்றிக் கொண்டது. அதற்கான திட்டமிட்ட நகர்வு  முன்னதாகவே நடந்தது. நல்ல வேட்பாளரை நிறுத்தியதால் எல்டிஎப் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தோல்வி ஏற்பட்டுள்ளது. அதைப் பரிசீலிப்போம்.  திருச்சூரில் சுரேஷ் கோபி 86,000-க்கும் அதிகமான  வாக்குகளை கூடுதலாகப் பெற்று  பாஜகவுக்கு வெற்றியை  பெற்றுத் தந்துள் ளார். எல்.டி.எப்-ன்  தோல்வியை இறுதியான ஒன்றாகப் பார்க்க வேண்டாம். மக்கள் ஆதரவுடன் எல்.டி.எப்  மீண்டு வரும்” இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.