மலப்புரம், டிச.25- கிறிஸ்துமஸ் தினத்தன்று, கால் களை இழந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்திற்கு ‘கட வுளாக’ இருக்கும் இஸ்லாமிய பேரா சிரியர் நலமாக இருக்க வேண்டுமென சக்கர நாற்காலியில் சபரிமலைக்கு பய ணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந் தவர் கண்ணன் (49). தொழில் நிமித்த மாக கேரள மாநிலம் மலப்புரத்தில் வசித்து வருகிறார். இவர் 2013 இல் லாரி யிலிருந்து மரக்கட்டைகளை இறக்கும் போது விபத்தில் சிக்கினார். இதில் இடது காலை அவர் இழந்தார். மனைவி மற் றும் நான்கு குழந்தைகளின் எதிர்காலம் கருதி எடவண்ணபாறைப் பகுதியில் லாட்டரி சீட்டு விற்கும் தொழிலில் ஈடு பட்டார் கண்ணன். அவரது நிலையைக் கேட்டறிந்த கேரள மாநிலம் கொண் டோட்டி அரசு கலைக்கல்லூரி பேரா சிரியர் சமீரா, தேசிய சேவைத்திட்ட தன்னார்வலர்களுடன் சேர்ந்து உதவிக் கரம் நீட்டியுள்ளார். கண்ணனுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் வீடு கட்டிக்கொடுத் துள்ளார்.
ஆசிரியர் சமீரா தற்போது நீலாம்பூர் அரசுக் கல்லூரியில் பணி யாற்றி வருகிறார். இஸ்லாமியரான சமீராவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் நலமாக வாழ வேண்டி சுமார் 300 கி.மீ தூரம் சக்கர நாற்காலியில் சென்று சபரிமலை அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்த உள்ளார் கண்ணன். இதுதொடர்பாக அவர் கூறுகை யில், என்னுடைய வாழ்க்கையை மாற்றி யவர் சமீரா ஆசிரியர். எனக்கும் என் குடும்பத்துக்கும் அவர் கடவுள் போன்ற வர். அவரின் நலனுக்காக நான், கடந்த 15-ஆம் தேதி தடம்பரப்பா கிராமத்தில் இருந்து சபரிமலை பயணத்தை தொடங்கினேன். இந்தப் பயணம். நான் மனதார அய்யப்பனை வேண்டிக் கொண்டால், அவருக்கு அருள் புரிவார் என்று நம்புகிறேன் என்றார். சாதியாலும், மதத்தாலும் மக்க ளைப் பிரிக்க ஒரு கூட்டம் முயன்று கொண்டிருக்கும் தருணத்தில் சாதி கடந்து, மதம் கடந்து மனிதனை மனி தனாகப் பார்க்கும் மனித நேயர்கள் உள்ளவரை வகுப்புவாதிகளால் கேர ளத்தில் மட்டுமல்ல... தமிழகத்திலும் வேரூன்ற முடியாது என்பதற்கு மதம் கடந்த இந்த மனித நேய உத வியே சாட்சி.