ஆமதாபாத், நவ.14- குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், நவ்சாரி சட்டசபை தொகு திக்குட்பட்ட 19 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளனர். ‘ரயில் இல்லை, ஓட்டு இல்லை’ என எழுதப்பட்டுள்ள பதாகைகளை வைத்துள்ளனர். இங்குள்ள அஞ்செலி ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்துமாறு மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் அவர்க ளது கோரிக்கையை மாநிலத்திலும் ஒன்றி யத்திலும் ஆளும் பாஜக அலட்சியப்படுத்தி விட்டது. இதனால் கோபமடைந்த மக்கள் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அஞ்செலி ரயில் நிலையத்தில் ரயில் நிற்காததால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கிராம மக்கள் தெரி விக்கின்றனர்.
ஒரு நபர் வேறு இடத்திற்குச் செல்ல குறைந்தபட்சம் ரூ.300 செலவழிக்க வேண்டும் என்கிறார் ஹிதேஷ் நாயக். கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு ரயில் வசதி இல்லாததால் அவர்கள் கல்லூரிக்குச் செல்வதற்கு தாமதமாகிறது.
இதனால் கல்வி பாதிக்கப்படுகிறது என்கிறார் கல்லூரி மாணவி பிராச்சி படேல். “1966 ஆம் ஆண்டு முதல் உள்ளூர் பயணிகள் ரயில் இங்கு நின்று சென்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயில் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டது. ஆனால், ரயில் எங்கள் கிராமத்தில் நிற்காது. இதனால் 19 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அனைவரும் தினக்கூலித் தொழிலாளர்கள் என்கிறார் சோட்டுபாய் பாட்டீல். தேர்தல் நாளன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எப்படி வருகிறதோ அப்படியே, ஒரு வாக்கு கூட பதிவு செய்யா மல் அவற்றை திருப்பி அனுப்புவோம் என்கின்றனர் கிராம மக்கள்.