உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் சண்டிகர் - திப்ருகர் (அசாம்) எக்ஸ்பிரஸ் ரயில் வியாழனன்று பிற்பகல் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஏசி கோச்சின் 4 பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கோண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.