states

img

6 மாதங்களில் 9 பெண்களை கொன்ற சைக்கோ கொலையாளி

பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தில் என்கவுண் டருக்கு கண்டனங்கள் குவிந்ததால் சமீப காலமாக சரண டையும் குற்றவாளிகளை கூட துப்  பாக்கியால் சுட்டுப்பிடித்து கைது   செய்து வருகிறது அம்மாநில காவல்  துறை. கடந்த 2 மாதங்களில் மட்டும்  மாணவன் உட்பட 6-க்கும் மேற்  பட்ட குற்றவாளிகளை சுட்டுப்பிடித்து கைது செய்துள்ள நிலையில், பரேலி மாவட்டம் சிஷ்கர்  மற்றும் ஷாஹி அடியைச் சுற்றியுள்ள  பகுதிகளில் ஒரே பாணியில் 8 பெண்  கள் கொலை செய்து 6 மாத காலமாக போக்குக் காட்டி வரும் சைக்கோ கொலையாளியை போலீசார் மீது  நடவடிக்கை எடுக்காமல் அசால்ட் டாக இருந்ததால், கடந்த நவம்பர் 26 அன்று அதே சைக்கோ கொலை யாளி ஜகதீஷ்பூர் என்ற கிராமத்தைச்  சேர்ந்த ஊர்மிளா தேவி என்ற 55 வய தான பெண் வயல் பகுதியில் புடவை யால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை  செய்துள்ளான். இது சைக்கோ கொலையாளியின் 9-ஆவது கொலை யாகும். மக்கள் பாதுகாப்பு என அடிக்கடி துப்பாக்கியை தூக்கும் உத்தரப்பிரதேச போலீசார் இந்த விவ காரத்தில் சாதாரண கைது நடவ டிக்கை கூட எடுக்காமல் இருப்பது பலத்த சந்தேகத்தையும், அதிர்ச்சி அலையையும் ஏற்படுத்தியுள்ளது.

வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள பெண்கள்

தடயங்கள் சேகரிக்கப்பட்டு, தனிப்படை அமைக்கப்பட்டாலும் 6 மாதமாக 9 பெண்களை அவர்களது  சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்து வரும் சைக்கோ கொலையாளியை போலீசார் நெருங்க கூட முடியாமல் இருப்ப தால், பெண்கள் வெளியே வராமல்  வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள னர்.