உத்தரப்பிரதேசத்தில் எஸ்யூவி ரக காரும், பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் எஸ்யூவி காரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கெளரி பஜார்-ருத்ரா சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது காளிகோவில் அமைந்துள்ள பகுதியில் சாலை வளைவில் கார் வந்துகொண்டிருந்தபோது எதிரே கோரக்பூரிலிருந்து ருத்ராபூர் நோக்கி வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இரவு நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைதொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.