states

img

ஆந்திரா:புதிய நோயால் ஒருவர் பலி-350 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஆந்திராவில் புதிதாக பரவி வரும் நோயால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலூரு பகுதியில் மக்கள் நேற்று  முதல் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு வாந்தி, கைகால் வலியுடன் கூடிய மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கையுடன் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு நகராட்சி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுவரை சுமார் 350 பேர் எலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். 
இந்த திடீர் நோய் பாதிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில்  நகராட்சி சார்பில் 24 மணி உதவி மையமும் திறக்கப்பட்டிருக்கிறது. கொதிக்கவைத்த நீரையே அருந்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

நோய்க்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 
 

;