science

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 ஈக்களின்  அறிவுத் திறன்

பழ ஈக்கள் (Drosophila) மீது செய்யப்பட ஒரு ஆய்வின்படி அவை இதற்கு முன் அறியப்பட்டதை விட மேம்பட்ட அறிவுத் திறன் பெற்றவை எனத் தெரிய வந்துள்ளது.மெய்நிகர் சூழல், நரம்பு மண்டல கையாளல் மற்றும் மூளையின் இயக்க நேரடி கண்காணிப்பு ஆகிய சோதனைகள் மூலம் பழ ஈக்களுக்கும் பாலூட்டிகளுக்கும் இடை யில் அறிவாற்றல் திறனில் பல ஒற்றுமை களைக் கண்டுள்ளனர். இந்த ஆய்வு  ‘நேச்சர்’ (nature) இதழில் வெளிவந் துள்ளது.

2 மலர்களின் திடீர் மாற்றம் 

ஒரு குறிப்பிட்ட மரபணுப் பிறழ்வினால் கொலராடோ ஊதா கொலும்பைன்ஸ் (colorado blue columbines) எனும் பூக்கள் சில இதழ்களையும் தேன் சுரக்கும் உறுப்புகளையும் இழப்பது ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை மாற்றங்கள் டார்வின் நினைத்தபடி படிப்படியாக நிகழும் பரிணாமம் அல்லாமல் தாவும் நிலை பரிணாமத்திற்கு எடுத்துகாட்டுகள் என இந்த ஆய்வாளர்கள் ஊகிக்கிறார்கள்.

3 காட்டிக்கொடுக்கும் கை பேசி 

ஒருவரது கைபேசி தரவுகளைக் கொண்டு செயற்கை நுண்ணறிவானது அவர் எப்படிப் பட்டவர் என்பதை கண்டுபிடிக்கிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பெயர் தெரியாத 40000  வாடிக்கையாளர்களில் தாங்கள் குறிவைக்கும் நபர்களை ஏஐ(artificial intelligence) 50 சதவீதம் மிகச்  சரியாகக் கணித்துக் கொடுத்ததாம். இந்த ஆய்வு ஜனவரி 25 ‘நேச்சர் கம்யூனிகேசன்ஸ்’ (nature communications) எனும் இதழில் வெளிவந்துள்ளது. மனிதர்கள்  மற்றவர்களுடன் பழகும் விதங்களைக் கொண்டு நமக்குத்தேவையான நபர்களை அடையாளம் காண முடியும் என்று இது தெரிவிக்கிறது. ‘மனிதர்கள் நிறுவப்பட்ட சமூக வட்டங்களுக்குள்ளே தங்களை இருத்திக் கொள்கிறார்கள் என்பதிலும் இந்த ஊடாட்டங்கள் திடமான வகை மாதிரியாக இருக்கின்றன என்பதிலும் ஆச்சரியம் இல்லை;ஆனால் இந்த மாதிரிகளைக் கொண்டு தனி நபர்களை அடியாளம் காண முடியும் என்பது ஆச்சரியமானது’ என்கிறார் மின்னசோட்டா பல்கலைக்கழக கணினி அறிவியலாளர். ஜெய்தீப் ஸ்ரீவத்சவா.  சில அரசாங்க விதிகளின்படி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தினசரி உரை யாடல்களை அவர்களது சம்மதமின்றி மற்றவர்களு டன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது விற்கலாம். ஒரே  நிபந்தனை பெயர் மறைக்கப்பட்ட தரவுகளாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர் களுக்கு புனைப் பெயர்கள் கொடுப்பதன் மூலம் இதை செய்ய இயலாது என இந்த ஆய்வின்  மூலம் தெரிகிறது. நமது மூளை நரம்புப்  பின்னல்கள் போல் செயல்படும் ஒரு செயற்கை நுண்ணறிவுப் பின்னலுக்கு மக்களது வாராந்திர உரையாடல்கள் மற்றும் குறுஞ்செய்திகளின் வகை மாதிரிகளை அடையாளம் காண பயிற்சி அளித்தார்கள். ஒவ்வொரு உரையாடல்களின் தேதி,நேரம், நேர அளவு,  அழைப்ப அல்லது குறுஞ்செய்தியா என்பது போன்ற தரவுகள் அதற்கு கொடுக்கப்பட்டன. பெயர் மறைக்கப்பட்ட தரவுத் தொகுதி செயற்கை நுண்ணறிவுக்கு கொடுக்கப்பட்டது. இதற்கு  ஒரு வாரத்திற்குப் பின் நடைபெற்ற இலக்கு வைக்கப்பட்ட நபரின் தரவுகள் மட்டும்  தரப்பட்டபோது  14.7 சதவீதம் அவரின் தொடர்பு நபரின் தரவுகளும் சேர்த்து கொடுக்கப்பட்ட போது 52.4 சதவீதம் சரியாகக் கணித்ததாம். 20வாரங்கள் கழித்து நடைபெற்ற தரவுகள் தரப்பட்டபோதும் 24.3 சதவீதம் நபர் களை அடையாளம் கண்டதாம். இதன் மூலம் சமூக நடத்தைகள் நீண்ட காலத்திற்கு அடையாளம்  காணக்கூடியதாக உள்ளது என்று தெரிகிறது.

4 மனிதனிடமிருந்து தொற்றும் நுண்ணுயிரிகள் 

மனிதனிடமிருந்து வளர்ப்புப் பிராணிகளுக்கு நுண்ணுயிர்கள் தொற்றுவது முந்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருந்தது. இப்போது நகருக்குள் இடம் பெயரும் காட்டு விலங்குகளுக்கும் அப்படிப்பட்ட தொற்றுகள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. இது அவைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். நகர்ப்புற, கிராமப்புற மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடல் பகுதியிலுள்ள நுண்ணுயிர்களின் டிஎன்ஏக்களை ஆய்வு செய்ததில் நகர்ப்புற விலங்குகளின் நுண்ணுயிர்கள் நகர்ப்புற மனிதர்களுடன் ஒத்திருந்தன. கிராமப்புற மனிதர்களோடும் விலங்குகளோடும் வேறுபட்டிருந்தன. இது எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்கிறார் ஜெர்மனியிலுள்ள மாக்ஸ் பிளான்க் வளர் உயிரியல் மையத்தை சேர்ந்த டைச்சி சுசுகி.மனிதர்கள் அன்றாட வாழ்க்கை முறையில் கழிக்கும் நுண்ணுயிர்கள் இந்த விலங்குகளுக்குள் தொற்றியிருக்கலாம் அல்லது மனிதர்களின் கொழுப்பு,புரத எச்சங்களை உண்பதினாலும் நடந்திருக்கலாம். இந்த விலங்குகளின் உடல் கூறுகள் பரிணாம மாற்றங்கள் அடைவதற்கு முன் நுண்ணுயிரிகள் தொற்றுவது அவற்றின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்கிறார் இன்னொரு ஆய்வாளர்.

5 விண்வெளி  ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு

தொலைதூர விண்மண்டலங்களிலிருந்து மிகுந்த ஒளியுடன் வரும் ரேடியோ அலைகள் ‘ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட்ஸ்’ Fast radio bursts (FBR) என அழைக்கப்படுகின்றன. இவை சில மில்லி செகண்டுகளே நீடிக்கக்கூடியவை.இவை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டன.இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை காணப்பட்டாலும் அவை எந்த விண்பொருட்களால் உண்டாக்கப்படுகின்றன என்பது இதுவரை அறியப்படவில்லை.இப்போது நம் நாட்டில் புனே நகரிலுள்ள தேசிய ரேடியோ விண் இயற்பியல் மையமும் கலிபோர்னியா பல்கலைக்கழகமும் ஜிஎம்ஆர்டி எனும் தொலைநோக்கியின் மூலம் இந்த நிகழ்வை ஆய்வு செய்துள்ளனர். இதன் மூலம் அவை எவ்வாறு உண்டாகின்றன என்பதற்கான தடங்கள் தெரியவந்துள்ளன. இப்போது காணப்பட்ட எஃப்பிஆர், அரை பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள சுழலேணி வடிவ விண்மண்டத்தில் நிகழ்ந்துள்ளது. அண்மையில் அங்கு ஒரு சேர்க்கை நிகழ்ந்து அதனால் உருவான பிரம்மாண்டமான நட்சத்திரமே இந்த ரேடியோ ஒளி அலைகளை உருவாக்கியிருக்கலாம் என்கிறார் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும் மையத்தின் முனைவர் மாணவருமான பால்பிரீத் கவுர்.ஜி.எம்ஆர்டி தொலைநோக்கியில் உள்ள 30 ஆன்டென்னாக்களை பல்வேறுவிதமாக இணைத்துப் பயன்படுத்துவதன் மூலம் விண்மண்டலத்தில் இந்த ரேடியோ ஒளிக்கற்றைகள் ஏற்படுத்தும் வாயுக்களை விரிவாக ஆய்வு செய்ய முடியும் என்கிறார் இந்த ஆய்வின் இணை ஆசிரியர் நிஸ்ஸிம் கனேகர்.