புதுதில்லி,பிப்.24- 2019 ஆம் ஆண்டில் நில வுக்கு இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் தற் போது அதிதீவிர சூரிய எரிப்பு காரணமாக சூரிய புரோட்டான் நிகழ்வுகளைக் கண்டறிந் துள்ளதாக இந்திய விண் வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. சூரியன் சுறுசுறுப்பாக இருக்கும்போது, சூரிய எரிப்பு எனப்படும் கண்கவர் வெடிப்பு கள் சில சமயங்களில் ஆற்றல் மிக்க துகள்களை (சோலார் புரோட்டான் நிகழ்வுகள் அல்லது SPEகள் என அழைக் கப்படுகின்றன) கிரகங்களுக் குள் வெளியேற்றுகின்றன. இதைத்தான் சந்திரயான்-2 கண்டறிந்துள்ளது.