science

img

பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!

பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட், இன்று காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி-58 என்ற ராக்கெட் ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைகோள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் சுமந்தபடி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 
5 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்ட எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் 650 கி.மீட்டர் வட்டமான பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. மேலும், இந்த செயற்கைகோள் எக்ஸ்ரே மூலங்களின் தற்காலிக நிலை, நிறமாலை போன்ற அறிவியல் ஆய்வுகளையும், விண்வெளியில் உள்ள தூசு, கருந்துகள், வாயுக்களின் மேகக்கூட்டமான ‘நெபுலா’ உள்ளிட்டவற்றையும் ஆராய உள்ளது. மேலும், ஒரே நேரத்தில் எக்ஸ் கதிர் மூலங்களின் நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய முடியும். இந்த தரவுகள், பிரபஞ்சத்தின் செயல்பாடு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.