science

img

எல்விஎம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டா, மார்ச் 26- இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் எல்விஎம் மார்க்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக புவி வட்ட பாதை யில் நிலை நிறுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனமான இஸ்ரோ, நம் நாட்டின் செயற்கைக் கோள்கள் மட்டுமல்லாமல், வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது.  இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72  இணைய சேவை செயற்கைக் கோள்களை  விண்ணில் ஏவ அந்த நிறுவனம், இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் சுமார் ரூ.1000 கோடியில் ஒப்பந்தம் மேற்கொண்டது.  இதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி 36 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. அவை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப் பட்டன. 2-வது கட்டமாக மீதமுள்ள 36 செயற்கை கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம் மார்க்-3 ராக்கெட் மூலம் ஞாயிறன்று காலை 9 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டன.  இந்த செயற்கைக்கோள்கள் பூமிக்கு மேலே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் 87.4 டிகிரியில் புவி வட்ட  பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப் பட்டன. செயற்கைக்கோள்கள், தடை யில்லா பிராட்பேண்ட் இணைய தள சேவையை வழங்கும்.

;