science

img

ஆரோக்கியமாக உள்ளார் சுனிதா வில்லியம்ஸ் - நாசா

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், புட்ச்  வில்மோர் ஆகியோர் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவ பரிசோதனைக்குப் பின் நாசா அறிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெறும் 8 நாள் பயணமாக கடந்த 2024 ஜூன் 5-ஆம் தேதி சென்ற சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலனில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் அங்கேயே தங்க நேரிட்டது. அவர்கள் பூமிக்குத் திரும்புவது சிக்கலாக மாறியது. இந்நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 டிராகன் விண்கலன் உதவியுடன் இன்று இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் அவர்கள் பூமியை வந்தடைந்தனர்.

இதை தொடர்ந்து, பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், புட்ச்  வில்மோர் ஆகியோர் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவ பரிசோதனைக்குப் பின் நாசா அறிவித்துள்ளது. இவ்விருவரின் உடலும் பூமியின் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப ஒத்துழைக்கத் தொடங்கியுள்ளதாகவும், அவர்களுக்கு பார்வைக் குறைபாடு, தசை இழப்பு, சமநிலை பிரச்சினை மற்றும் எலும்பு அடர்த்தி இழப்பு போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய, அவர்கள் 45 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.