science

img

பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் ஏப் .22 இல் விண்ணில் பாய்கிறது!

சென்னை, ஏப்.16- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்கு தேவை யான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள் ளிட்ட பல்வேறு தகவல்களுடன், வழிகாட்டு செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவற்று டன் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைகோள்களும் விண் ணில் ஏவப்படுகிறது.  அந்தவகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கை கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறு வனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி செயற் கைகோளை விண்ணில் ஏவு வதற்காக இஸ்ரோ பிஎஸ்எல்வி.  சி-55 ராக்கெட்டை வடிவமைத் துள்ளது.  இந்த ராக்கெட்டில், சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலி யோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. ஏற்கனவே  பிஎஸ்எல்வி சி-29 ராக்கெட் மூலம்  கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று டெலியோஸ்-1 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.  

இதனை தொடர்ந்து, டெலி யோஸ்-2 செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்டில் பொறுத்தப் பட்டு ஏப்ரல் 22 ஆம் தேதி (சனிக் கிழமை) விண்ணில் ஏவப்படு கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானி கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  டெலியோஸ்-2 செயற்கை கோளானது பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்கு இதன் மூலம் தகவல்களை பெற முடியும். முந்தைய ராக்கெட் ஏவுதல் போல் இல்லாமல், ராக் கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து புதுமையான முறையில் இந்த ஏவுதல் மேற் கொள்ளப்படுகிறது.  பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் பிஎஸ்எல்வி புதிய ஒருங்கிணைப்பு வசதியில் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் ராக்கெட் என்ற பெரு மையை பெற்றுள்ளது. இதன் மூலம் இஸ்ரோ ஒரு புதிய அணுகுமுறையைப் பின்பற்று கிறது. புதிய அணுகுமுறை யானது, விண்வெளி நிறுவனம் குறைந்த நேரத்தில் அதிக பய ணங்களை தொடங்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.