politics

img

ஊழலுக்காகவே சிறை சென்ற முதலமைச்சர்.... அதிமுக மீது துரைமுருகன் தாக்கு....

சென்னை:
ஊழலுக்காக முதலமைச் சரே சிறைக்கு சென்றது அதிமுக ஆட்சியில்தான் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர் சித்து பேசுவதை கண்டிக்கும் விதமாக துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள் ளார்.அதன் விவரம் வருமாறு:-தமிழ்நாட்டு வரலாற் றிலே சிறப்பான ஆட்சி தந்தது அதிமுக தான் என்று கற்பனைக் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. ஊழலுக்காக முதலமைச்சரே சிறைக்குப் போனதும், முதலமைச்சர் மீதே சொத்துக் குவிப்பு வழக்கு வந்ததும் அதிமுக ஆட்சியில்தான்.

இதுவரை, அக்கட்சியின் சார்பாக நான்கு முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். அதில் ஒரு முதலமைச்சர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதானவர், பிறகு சிறையும் சென்றவர். மீதியுள்ள இரண்டு முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சொத்துக் குவிப்புப் புகாரில் சிக்கியுள்ளவர்கள்; நீதிமன்றத்தின் தண்டனையைப் பெற வேண்டியவர்கள் என்பதை ஏனோ எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டார். இனி “போதும் உங்கள் சகவாசம்”என தங்களது வாக்குகள் மூலம் “உங்களை ஓட ஓட விரட்டி அடிக்க” மக்கள் தயாராகி விட்டார்கள்.முதல் தேர்தல் பரப்புரை கூட்டத்திலேயே சாதனைகளைச் சொல்ல முடியாமல் திணறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, அடுத்தடுத்த கூட்டங்களிலும் திக்குமுக்காடப் போகிறார் என் பது மட்டும் நிச்சயம்.இவ்வாறு துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.

;