மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் தனிப்பட்ட சுகாதார விவரங்களை கூகுள் நிறுவனம் சேகரித்து வருகின்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தனிநபரின் சுகாதாரத் தரவுகள் என்பது மிகவும் தனிப்பட்டது. அதே வேளையில், பெரும்பாலான மக்கள் தங்கள் சுகாதாரம் சார்ந்த தரவுகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். இருப்பினும், கூகுள் நிறுவனம், பிராஜெக்ட் நைட்டிங்கேல் (Project Nightingale) எனும் திட்டத்தின் கீழ் கடந்த சில காலமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சுகாதார விவரங்களை சேகரித்து வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில் நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கப்படுவதற்கான காரணத்தை தற்போது கூகுள் வெளியிட்டுள்ளது. அதாவது குறித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கு உதவக்கூடிய நுண்ணறிவு திறன் கொண்ட புதிய அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது இலகுபடுத்தப்படும் எனவும், இத்தரவுகள் அனைத்தும் சுகாதார தனியுரிமைச் சட்டத்திற்கு உட்பட்டே திரட்டப்படுகிறது எனவும், அத்துடன் வணிக இணை ஒப்பந்தத்தின் (Business Associate Agreement) அடிப்படையில் இந்த தரவுகள், விளம்பரம் போன்ற வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படாது எனவும் விளக்கம் அளித்துள்ளது.