நாட்டின் கிழக்கு பகுதி மாநிலமான ஒடிசாவில் 25 ஆண்டுகால பிஜு ஜனதா தள ஆட்சியை வீழ்த்தி, முதன்முறையாக ஆட்சியில் அமர்ந்தது பாஜக. ஆட்சியில் அமர்ந்தவுடன் குஜராத், உத்தரப் பிரதேச மாநிலங்களில் நடை முறையில் இருப்பது போல பசு வதை வன்முறை சம்பவங்களை கட்டவிழ்த்துவிட்டது.
இந்நிலையில், தங்க நகைக் காக 46 ஆண்டுகள் திறக்கப்படா மல் இருந்த உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறையை திறக்க ஒடிஷா பாஜக அரசு மறைமுக மாக உத்தரவிட்டதாக ஏற்கெனவே தகவல் வெளியகிய நிலையில், ஞாயிறன்று மதியம் 1.28 மணிக்கு பொக்கிஷ அறையை தொல் லியல்துறை திறந்தது.
12 ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்ட பூரி ஜெகநாதர் கோவிக்கு பல் வேறு கால கட்டங்களில் அங்கு ஆட்சி செய்த மன்னர்கள் விலை மதிப்பு மிக்க தங்கம், வைரம், வைடூரியம் என விலை மதிப் பில்லா நகைகளை காணிக்கை யாக அளித்தனர். இந்த நகைகள் அனைத்தும் பொக்கிஷ அறைக் குள் குவித்து வைக்கப்பட்டு இருப்ப தாக கூறப்படுகிறது. கோவில் தரைப் பகுதிக்கு கீழே சுரங்க அறை ஏற்படுத்தி அதற்குள் நகைகள் வைக்கப்பட்டுள் ளன. கடைசியாக 1978இல் பொக் கிஷ அறை திறக்கப்பட்டது. எனினும் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக தொல்லியல் துறை குழு அய்வு செய்யாமல் திரும்பி வந்துவிட்டது. தொடர்ந்து 2018இல் பொக்கிஷ அறையின் சாவி காணாமல் போனதாகவும் தகவல் வெளியா னது. இதனை வைத்து,தமிழர்க ளிடம் ஜெகநாதர் கோவிலின் பொக் கிஷ சாவி உள்ளது” என பாஜக சமீ பத்தில் நிறைவு பெற்ற தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டது.
இந்நிலையில், பாஜக ஆட்சி அமைந்தவுடன் 46 ஆண்டுகளு க்கு பிறகு தொல்லியல் துறை அதி காரிகள் அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் முன்னிலை யில் பொக்கிஷ அறையை திறந்த னர். பொக்கிஷ அறையில் மேற் கொள்ளப்படும் அனைத்து பணிக ளும் முழுவதும் வீடியோ ரெக்கார்டு செய்யப்படும் என்றும், மிகவும் ரகசியமாகவே இது வைத்திருக் கப்படும் எனவும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
பாஜக சந்தேகம்
பொக்கிஷ அறையில் இருக் கும் நகைகள் தொடர்பான விப ரங்கள் ரகசியமாகவே இருக்கும் என தொல்லியல் துறை அறிவித் துள்ளது கடும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. தங்கம், வைர நகைக்காக பூரி ஜெகநாதர் கோவி லின் பொக்கிஷ அறையை பாஜக திறக்கிறதா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
சாவி யாரிடமும் இருந்தது?
ஒடிஷா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது பிரதமர் மோடி,”பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறை கருவூலம் தொடர்பான நிகழ்வுகளைப் பார்த்து, ஒட்டுமொத்த ஒடிஷா மக்களும் கோபத்தில் உள்ளனர். அந்தக் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். இதை தமிழ்நாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்? கொண்டு போனவர்கள் யார்? இப்படிப்பட்டவர்களை நீங்கள் மன்னிப்பீர்களா?” எனக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டார். அதாவது பொக்கிஷ அறையின் சாவி காணாமல் போனதாகவும், சாவி தமிழ்நாட்டில் இருப்பதாகவும் கூறினார் பிரதமர் மோடி. மோடி ஆட்சிக்கு வந்த பின்பே 2018இல் பொக்கிஷ அறை சாவி காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சாவி எப்படி கிடைத்தது? தொல்லியல்துறையிடம் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சாவியை மோடி அரசு வாங்கி, மாநில பாஜக அரசிடம் கொடுத்தா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.