india

img

பீகாரில் பசு திருட வந்ததாக சந்தேகித்து 3 பேர் அடித்துக் கொலை

பீகார் மாநிலத்தில் பசு மாடு திருட வந்ததாக சந்தேகிக்கப்பட்டு 3 பேரை, ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் பனியாபூர் காவல் நிலையத்தின் எல்லைக்குள்ளான கிராமம் ஒன்றில் இன்று காலை மூன்று பேர்  கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்டனர். பசு மாடு திருட வந்ததாக சந்தேகித்து, அவர்கள் மூவரையும் கிராமத்தினர் கடுமையாக அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது.  

மூன்று பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் இருந்த இன்னொருவரை அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனை அழைத்துச் செல்லும்போது வழியிலேயே இறந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

;