குஜராத் மாநிலம் கட்ச் கடற்கரை, அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் கடற்பகுதியில் மற்றும் வட கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, புய லாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெள்ளி யன்று அறிவித்தது.
“அஸ்னா (பாகிஸ்தான் நாடு வைத்த பெயர்)” என அழைக்கப்படும் இந்த புயல் தற்போது பூஜில் (குஜராத்) இருந்து மேற்கு - வடமேற்கில் 190 கிமீ தொலைவிலும், குஜராத்தின் நலியாவிலி ருந்து 100 கிமீ மேற்கு-வடமேற்கிலும், பாகிஸ்தானின் கராச்சிக்கு தென்கிழக்கே 170 கிமீ தொலைவிலும் நிலை கொண் டுள்ளது.
இது அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்தியக் கடற்கரையிலிருந்து விலகி வடகிழக்கு அரபிக்கடலில் மேற்கு-வட மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
இந்த “அஸ்னா” புயல் ஓமன் நோக்கி திசை திரும்பினால் மட்டுமே குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் சாதாரண கன மழையில் இருந்து தப்பிக்கும். பாகிஸ் தான் நோக்கி கரையை கடந்தால் குஜ ராத், ராஜஸ்தான் பகுதிகளில் அதீத அளவில் கனமழை கொட்டித்தீர்க்கும் என தற்போதே எச்சரிக்கை தகவல்கள் வெளி யாகியுள்ளன.