india

img

பிரதமர் மோடியின் குறிக்கோள் அம்பானி, அதானியை பாதுகாப்பது தான்

புதுதில்லி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தற்போது ஒன்றிய பட்ஜெட் உரை மீதான விவாதம் நடை பெற்று வருகிறது. திங்களன்று மக்களவை யில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “எதற்கும் உதவாத பட்ஜெட் ஒன்றை பாஜக அரசு தாக்கல் செய்திருக்கிறது. கோடிக்கணக்கான நடுத்தர மக்களின் முதுகில் குத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. இதுதான் இந்த பட்ஜெட்டில் மோடியின் சாதனையாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இந்தியாவில் உள்ள 93% மக்களுக்கு எந்த சலுகையும், அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகவில்லை. ஆனால் விமான நிலையம், ரயில் நிலையங்கள் ஆகியவை அம்பானி, அதானியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே பணமதிப்பிழப்பு நட வடிக்கையின் மூலம் இளைஞர்களின் வேலை வாய்ப்பை குழிதோண்டி புதைத்துவிட்டார் மோடி. இப்போதாவது பட்ஜெட்டில் இளை ஞர்களின் வேலைவாய்ப்பு தொடர்பாக ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா என்று  பார்த்தோம். ஆனால் இதிலும் எந்த அறி விப்பும் இல்லை. ஒருவேளை கொரோனா காலத்தில் தட்டு தட்டுவது, செல்போன் டார்ச்சை அடிக்கச் சொன்னதை தான் இளைஞர்களுக்கு அரசு கொடுக்கும் வேலைவாய்ப்பு என மோடி நினைத்து விட்டார் எனத் தோன்றுகிறது.

இங்கே அமர்ந்திருக்கும் நிர்மலா சீதா ராமனை பார்த்து கேட்கிறேன். இளைஞர் களுக்கான வேலைவாய்ப்புக்கு இந்த பட்ஜெட்டில் எதையாவது அறிவித்தீர்களா? நீங்கள் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் பெரு முதலாளிகளுக்கு மட்டுமே உரியது. பிரதமர் மோடியின் குறிக்கோள் ஒன்றுதான். எப்படியாவது ஏ1, ஏ2 (அம்பானி, அதானி) ஆகியோரை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் கூறினார்.

வரிவிதிப்பு தீவிரவாதம்

இறுதியாக,”பட்ஜெட்டில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கல்விக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பட்ஜெட்டில் எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை. மோடி அரசு என்பது வேலைவாய்ப்பின்மை மற்றும் வினாத்தாள் கசிவின் அர்த்தமாக மாறிவிட்டது. ஜிஎஸ்டி என்பது வரிவிதிப்பு தீவிரவாதம். ஜிஎஸ்டி மூலம் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அழிகின்றன. ஜிஎஸ்டி மூலம் வரி பயங்கரவாதத்தை ஏவியுள்ளது ஒன்றிய அரசு” என்று ராகுல் காந்தி காட்டமாக பேசினார்.

பாஜக அமளி ;  “இந்தியா” கூட்டணி பதிலடி

ராகுல் காந்தியின் அதிரடிப் பேச்சால் அலறிய பாஜக எம்.பி.க்கள் அவரை பேச விடாமல் அமளியில் ஈடுபட்டனர்.  “இந்தியா”  கூட்டணி எம்.பி.க்கள் பதிலுக்கு கோஷங் களை எழுப்பியதும் பாஜக எம்.பி.க்கள் மிரண்டு போய் இருக்கையில் அமர்ந்தனர்.