india

img

புதுதில்லி கேரளாவுக்கு ரூ.24,000 கோடி சிறப்பு நிதி தொகுப்பு வழங்கிடுக!

கேரளாவுக்கு ரூ.24,000 கோடி சிறப்பு நிதி தொகுப்பு வழங்க வேண்  டும் என்று நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் கோரிக்கை விடுத்  துள்ளார். இந்த நிதி தொகுப்பை  அடுத்த மத்திய பட்ஜெட்டில் சேர்த்து அறிவிக்க வேண்டும் என வும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒன்றிய பட்ஜெட்டுக்கு முந்  தைய விவாதத்தின் ஒரு பகுதியாக  கூட்டப்பட்ட மாநில நிதியமைச்சர்  கள் கூட்டத்தில் ஒன்றிய நிதியமைச் சர் நிர்மலா சீதாராமனிடம் இந்தக்  கோரிக்கையை கே.என்.பால கோபால் முன்வைத்தார்.

மனித வள மேம்பாடு, நிலை யான வளர்ச்சி இலக்குகள், ஸ்டார்ட்  அப்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் நாடு பெருமை  கொள்ளும் வகையில் கேரளம் சாதனை படைத்துள்ளது. அவற்  றைத்  தக்கவைத்து மேம்படுத்து வதற்கு ஆதரவான அளவில் நிதி  உதவி தேவைப்படுகிறது. கேர ளத்தின் தற்போதைய நிதிச் சிக்கல் களை சமாளிக்கும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு சிறப்பு நிதி உதவி கோரப்பட்டுள்ளது. 

கோவிட் பாதிப்பில் இருந்து மீள்  வதற்கான கேரளத்தின் முயற்சி களுக்கு ஒன்றிய அரசின் பல  கொள்கைகளும் நடவடிக்கை களும் தடையாக உள்ளன. சட்டத்  தின் கீழ் கேரளத்திற்கு உரிமை யுள்ள வரம்புகளுக்குள் கடன்  வாங்கக்கூட அனுமதிக்கப்பட வில்லை என்று கேரள நிதி அமைச்  சர் பாலகோபால் கூறினார். அரசின் கடன் வரம்பு மற்றும் கடன் வாங்கு வதைக் குறைப்பதன் மூலம் பொதுக் கணக்கில் உள்ள தொகை மற்றும் அரசு நிறுவனங்களால் கடன் வாங்குவது குறைக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தலா ரூ.5710 கோடி குறையும்.

கிப்பி மற்றும் பென்ஷன் நிறு வனத்தின் முந்தைய கடன்களை  இந்த ஆண்டு மற்றும் அடுத்த  ஆண்டுக்கான கடன் அனுமதியில்  இருந்து குறைக்கும் நிலைப் பாட்டை ஒன்றிய அரசு எடுத்துள்  ளது. ஆனால், தேசிய நெடுஞ்  சாலை மேம்பாட்டுக்கு தேவை யான நிலம் கையகப்படுத்தும் செல வில் 25 சதவிகிதம் அதாவது 6,000  கோடி ரூபாய் செலுத்த வேண்டிய  ஒரே மாநிலம் கேரளா என்று நிதி யமைச்சர் கே.என்.பாலகோபால் சுட்டிக்காட்டினார். இதற்கு இணை யான தொகையை இந்த ஆண்டு நிபந்தனையின்றி கடன் வாங்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

ரூ.5,000 கோடி விசல் தொகுப்பு தேவை
மூலதன முதலீட்டுத் துறையில் கேரளம் குறிப்பிடத்தக்க முன் னேற்றம் அடைந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க் கப்படும் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் மற்றும் துறைமுகத் துறைக்கு மாநிலத்தின் தரப்பில் நிறைய பணம் செலவழிக்க வேண்  டும். எனவே, ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.5000 கோடி ‘விசல் பேக்கேஜ்’ அறிவிக்க வேண்டும்.

கோழிக்கோடு மற்றும் வய நாட்டை இணைக்கும் சுரங்கப் பாதை அமைப்பது உள்ளிட்ட திட்  டங்களுக்கு ரூ.5,000 கோடி அவசர மாக தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒன்றிய அரசு  அறிவித்த மூலதன முதலீட்டுக் கடன் திட்டத்தில் கேரளாவுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சில்வர் லைனை அனுமதித்திடுக!

அரசு முன்மொழிந்துள்ள அரை  அதிவேக ரயில் திட்டத்திற்கு (சில்  வர்லைன்) அனைத்து அனுமதி களும் விரைவில் வழங்க வேண்  டும். தற்போதுள்ள ரயில் அமைப்பு களால் வளர்ந்து வரும் ரயில் போக்குவரத்து கோரிக்கைகளை குறைபாடற்ற முறையில் பூர்த்தி  செய்ய முடியவில்லை என்பதை யும் கருத்தில் கொள்ள வேண்டும்,  இது அரை-அதிவேக பாதைகளை  அமைப்பதற்கான தேவையை நியா யப்படுத்துகிறது. தற்போதுள்ள ரயில் அமைப்புகளை மேம்படுத்து வதற்கான திட்டங்களும் இருக்க வேண்டும். அதிக எக்ஸ்பிரஸ் மற்  றும் பயணிகள் ரயில்களை அனு மதிக்க வேண்டும் என்று அமைச்சர் பாலகோபால் கேட்டுக்கொண்டுள்ளார்.