india

img

முக்கிய பொறுப்புகளில் நேரடி நியமனம் முறைக்கு வலுத்த எதிர்ப்புகள் - பணிந்த ஒன்றிய அரசு

ஒன்றிய அரசின் முக்கிய உயர் பதவிகளுக்கான நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பை யுபிஎஸ்சி ரத்து செய்துள்ளது. 
அண்மையில், ஒன்றிய அரசின் துறைகளில் 10 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குநர் பதவிகள், துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பை ஒன்றிய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையமான யுபிஎஸ்சி வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பானது, ஒன்றிய அரசின் முக்கிய பொறுப்புகளில் இட ஒதுக்கீட்டு முறையை காலி செய்து, நேரடியாக சங்பரிவார் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை பணியமர்த்துவதற்கான அறிவிப்பாக இருந்தது. யுபிஎஸ்சி மூலம் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில் பாஜக-வின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்தது நிலையில், அந்த அறிவிப்பை ரத்து செய்யும்படி ஒன்றிய அமைச்சர் ஜித்தேந்திர சிங் யுபிஎஸ்சி-க்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பை யுபிஎஸ்சி ரத்து செய்துள்ளது.