india

img

இஸ்லாமியர்கள் கொல்லப்படுவார்கள் எனக் கோஷமிட்ட பாஜகாவினாரால் சர்ச்சை 

டெல்லி நாடாளுமன்றம் அருகே பா.ஜ.க நடத்திய போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நாடாளுமன்றம் அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைர
லாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் அஷ்வனி உபாத்தியாய் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில்தான் இஸ்லா
மியர்கள் கொல்லப்படுவார்கள் என கோஷம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் வசிப்பதற்கு ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல வேண்டும் எனப் போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் ஆவேசமாக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.  

இந்நிலையில், இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்த பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாய் உள்படக் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரிடம் நேற்று இரவு வரை விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அதுபோன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என உபாத்தியாய் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும், கொரோனா தொற்று இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவி வரும் இச்சமயத்தில், சமூக இடைவெளியை மறந்து, முககவசம் அணியாமல் பாஜாகவினர்
இந்த போராட்டத்தில் ஈடுபட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

;