ஐஐடி நுழைவுத்தேர்வு பயிற்சி மையத்தில் போலீசார் திடீர் சோதனை
சென்னை, மே 11 சென்னை கீழ்பாக்கத்தில் அமைந் துள்ள FIITJEE பயிற்சி மைதானத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த பயிற்சி மையம் மோசடி யில் ஈடுபடுவதாக மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐஐடி மற்றும் ஜேஇஇ தேர்வு களுக்கு வகுப்புகள் நடத்தும் FIITJEE பயிற்சி மையத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ரொக்கம், பல்வேறு ஆவணங்கள், அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதாவது, சுமார் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான 22 வங்கி காசோலைகள், கடிதங்கள் உள்பட 100 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.