tamilnadu

img

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கம்

நாகை - இலங்கை பயணிகள் கப்பல்  போக்குவரத்து மீண்டும் துவக்கம்

நாகப்பட்டினம், ஜூன் 1 - நாகை துறை முகத்தில் இருந்து இலங்கை காங்கே சன் துறைமுகத்துக்கு 2023 அக்டோபர் 14  ஆம் தேதி ‘செரியா பாணி’ என்ற பெய ரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட் டது. பருவமழை மற்றும் பல காரணங் களால் அதே மாதம் 23 ஆம் தேதி முதல்  அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் ‘சுபம்’ என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து காங்கேசன் துறைமுகத்துக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கடந்தாண்டு ஆகஸ்ட் 16 அன்று முதல் பயணிகள் கப்பல் சேவையை துவக்கியது. இருநாட்டு பயணிகளின் ஆர்வத் தால் சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இரு மார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்தடுத்த  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த மே 24 முதல் கப்பல் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட் டது. இதையடுத்து 8 நாட்களுக்கு பிறகு ஜூன் 1 (ஞாயிறு) முதல் வழக்கம்போல நாகை யில் இருந்து இலங்கைக்கு கப்பல் புறப்பட்டுச் சென்றது. காலை 7.30 மணிக்கு  புறப்பட்ட கப்பலில் 112 பேர் பயணம் செய்தனர்.