சென்னை,ஜூன்.02- பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
கடந்த 2024 டிசம்பர் 23ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என கடந்த 28ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும் தண்ட்ப்னை விவரம் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்திருந்தார்
இதனையடுத்து பாலியல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனையுடன் ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.