அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
மாற்றுத்திறனாளிகளுக்குப் பதவி உயர்வு இட ஒதுக்கீடு குறித்து ஆராயத் துணைக்குழு மற்றும் உயர்நிலை குழுக்களை தமிழ்நாடு அரசு ஏற்கனவே அமைத்திருந்தது.
அதன்படி, உயர்நிலைக் குழு பரிந்துரைத்ததையடுத்து மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலர் எஸ்.மதுமதி தெரிவித்துள்ளார்.
பார்வைத் திறன் குறைபாடுடையவர்கள், செவித் திறன் குறைபாடுடையவர்கள், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர், சக்கர நாற்காலிகள் உதவியுடன் தினசரி வாழ்வை நகர்த்துவோர், ஆட்டிசம் - அறிவுத்திறன் குறைபாடு. கற்றலில் குறைபாடு மற்றும் மனநல பாதிப்பு உடையோர் மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி உயர்வு ஒதுக்கீடு பொருந்தும்.