education

img

ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு - சிபிஎஸ்இ ஒப்புதல்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு என அறிவிப்பு வெளியாகியுள்ளது
கடந்த காலங்களில் சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தபட்டுவருகிறது. அதன் அடிப்படையில் 2026ஆம் கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது.
முதல் கட்டம் பிப்ரவரியிலும், இரண்டாம் கட்ட தேர்வு மே மாதத்திலும் நடத்தப்படும். இரண்டு கட்டங்களுக்கான முடிவுகள் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு தேர்வையும் மாணவர்கள் எழுதும் பட்சத்தில், எதில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதுவே இறுதி முடிவாக எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.