tamilnadu

img

வி.பி. சிங் புகழை நாளும் போற்றுவோம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

வி.பி. சிங் புகழை நாளும் போற்றுவோம்!  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை, ஜூன் 25 - முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்த நாளையொட்டி, அவரது புகழை நாளும் போற்றுவோம் என முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தெரி வித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் ஒட்டு மொத்த இந்தியாவுக்குமான தலைவராக, சமூகநீதிக் காவ லர் என்று அழைக்கப்படும் மறைந்த முன்னாள் பிரதமர்  வி.பி. சிங்கின் பிறந்த  நாள் இன்று கொண்டாடப்படு கிறது.  சமூக வலைதளத்தில் வி.பி.சிங் நினைவைப் போற்றி முதலமைச்சர் வெளி யிட்ட பதிவில், “இந்திய  நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும்  பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி  ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி. சிங் அவர்களின்  புகழை நாளும் போற்றுவோம். ஆதிக்கத் துக்கு எதிரான போராட்ட வரலாற்றை திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத் தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.