districts

திருச்சி முக்கிய செய்திகள்

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம்,  ஜூன் 25 - தஞ்சாவூர் விற்பனை  குழுவின் கீழ் இயங்கி  வருகிற பாபநாசத்தை  அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக்கொட்டை யூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது.  தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் சுதா, விற்ப னைக்குழு செயலாளர் சரசு முன்னிலையில், மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம்  நடைபெற்ற பருத்தி  ஏலத்தில் கும்பகோணம், இதன் சுற்று வட்டா ரத்தைச் சார்ந்த 657 விவ சாயிகள் 165 மெ.டன் அளவு பருத்தியை எடுத்து  வந்தனர். மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநி லத்தைச் சார்ந்த வணிகர் கள், கும்பகோணம், செம் பனார்கோவில், பண்ருட்டி  ஆகிய ஊர்களைச் சேர்ந்த வணிகர்கள், பருத்திக்கு அதிகபட்சம் ரூ.7699, குறைந்தபட்சம் ரூ.5289, சராசரி ரூ.6829  என விலை நிர்ணயித்தனர்.

தோழர்  ஏ.சி.தூயமணி காலமானார் 

தஞ்சாவூர்,  ஜூன் 25 -  இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தஞ்சை மாவட்ட மூத்த முன்னோடியான ஏ.சி.தூயமணி வயது முதிர்வு  மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் செவ்வா யன்று காலமானார். அவ ருக்கு வயது 80. சிஐடியு விரைவு போக்குவரத்துக் கழக தஞ்சை மாவட்டத் தலை வர், சிஐடியு தஞ்சை  மாவட்டப் பொருளாளர் உள்ளிட்ட பணிகளில்  திறம்பட செயலாற்றிய வர், சோழன் போக்கு வரத்து கழக சிஐடியு சங்கத்தை உருவாக்க அரும்பாடுபட்டவர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க தலைவ ரான ஏ.சி.தூய மணியின்  இறுதி நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது.  சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவே லன், சிஐடியு மாநிலச்  செயலாளர் சி.ஜெய பால், சிஐடியு மாவட்டத் தலைவர் ம.கண்ணன், தொழிற்சங்க தலை வர்கள் செங்குட்டுவன், காரல் மார்க்ஸ் உள்ளிட்ட சிபிஎம், தொழிற்சங்க தலைவர்கள், நிர்வாகி கள் அஞ்சலி செலுத்தினர்.

கல்லணைக் கால்வாய் புனரமைக்கும் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை, ஜூன் 25 - புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் கல்லணைக் கால்வாய் புனரமைப்புத் திட்டம் II-ன் கீழ், கல்லணை கால்வாய் புனரமைக்கும் பணி களை, மாவட்ட ஆட்சியர்  மு.அருணா, செவ்வா யன்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.  புதுக்கோட்டை மாவட் டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி ஆகிய வட்டங்களின் எல்லையில் செல்லும் கல்லணைக் கால்வாயின்  தொலை தூரம் 107.198  முதல் 1148.65 கிலோ  மீட்டர் வரை புனர மைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன.

கலைஞர் பல்கலை. அமைக்கும் உத்தரவில் கையெழுத்திட தாமதிக்கும் ஆளுநர் 
உயர்கல்வித் துறை அமைச்சர் குற்றச்சாட்டு

தஞ்சாவூர், ஜுன் 25 - தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு  பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட  முகாமில், உயர் கல்வித்துறை அமைச்சர்  கோவி.செழியன் கலந்து கொண்டார்.  அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “உயர்கல்வி துறை யில், மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதற்கு, முதல்வ ரால் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதன்படி இந்தாண்டு  25 சதவீதத்திற்கும் மேலாக கல்லூரி களில் மாணவர்கள் சேர்க்கைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.   தமிழகத்தில் 64 கல்லூரிகளில், இரண்டு ஷிப்ட் முறை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 15 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் துவங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பல  கல்லூரிகளில் முதுகலை பாடப்பிரிவு களிலும் மாணவர்கள் எண்ணிக்கை  உயர்த்தப்பட்டுள்ளது. புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது.  இதுவரை வரப்பட்டுள்ள விண் ணப்பங்களின் அடிப்படையில் கல்லூரி களில் கூடுதல் சேர்க்கை தொடர்பாக  முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளோம்.  ஓரிரு நாட்களில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்து விடு வோம். தமிழக முதல்வர் அரசு விழாவில் பேசியது போல, கலைஞர் பல்கலைக் கழகம் அமைப்பதற்கான உத்தரவில் கையெழுத்து போடுவதற்கு ஆளுநர் காலதாமதம் செய்கிறார். நான் ஆளு நரை சந்திக்க நேரம் கேட்ட நிலையில்,  இதுவரை ஆளுநர் எங்களை அழைக்க வில்லை. காத்துக் கொண்டிருக் கிறோம். ஆளுநர் அழைக்கும் நேரத் தில், கலைஞர் பல்கலைக்கழகத்தின் அவசியம் குறித்து ஆளுநரிடம் கூறி, அனுமதி பெற முயற்சிப்போம். விரை வில் அழைக்க வேண்டும். இல்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். முதல்வர் பேசியதற்கான அர்த்தத்தை ஆளுநர் புரிந்து கொண்டு விரைவில் அனுமதி வழங்குவார் அல்லது பேச அழைப்பார் என எதிர் பார்க்கிறோம். கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் அனுமதி தர மறுப்பது, மாண வர்களின் முன்னேற்றத்திற்கு தடை விதிக்கும் செயல் என்பதை நாடு அறியும். தமிழகத்தில், உயர்கல்விக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்பது தான் ஆளுநர், வந்ததில் இருந்து  எடுக்கும் முயற்சி. அந்த தடையை எல்லாம் உடைத்து உயர்கல்வியை உச்சத் திற்கு கொண்டு செல்வோம்” என்றார்.

சித்தன்னவாசல் கோடை விழா இன்று தொடக்கம்

புதுக்கோட்டை, ஜுன் 25 -  சித்தன்னவாசல் கோடை விழா ஜுன் 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.  இதுகுறித்து, புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்ததாவது:  பொது மக்களிடையே பாரம்பரிய கலை, பண்பாட்டை மேம்படுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்று லாத் துறையின் சார்பில், சித்தன்னவாசல் கோடை விழா  ஜூன் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் சித்தன்ன வாசலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இல வசம். முதல் நாளான ஜூன் 26 அன்று காலை, அரசு இசைப் பள்ளியின் வரவேற்பு நடனமும், மல்லர் கம்பமும், பெண்களுக் கான கபாடி மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகளும், பாரம் பரிய விளையாட்டுப் போட்டிகளான, பல்லாங்குழி, பரம பதம், உறியடித்தல், கல்லாங்காய், கிட்டிபில்லு, பலூன் உடைத் தல், நொண்டி அடித்தல், லக்கிக் கார்னர், ஹாக்கி மற்றும் கால்பந்து திறன் போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகலில், மதுரை கலைமாமணி த.கோவிந்தராஜின் கட்டைக்கால் ஆட்டம் நிகழ்ச்சியும், தப்பாட்டம், அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் நடனம், புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் போதை விழிப்புணர்வு குறித்த நாடக மும், அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் கிராமிய இசை நிகழ்ச்சி, நை யாண்டி மேளம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இரண்டாம் நாளான ஜூன் 27 அன்று ஆண்களுக்கான சிலம்பம், கபாடி மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான, பல்லாங்குழி, பரமபதம், உறியடித்தல், கல்லாங்காய், கிட்டிபில்லு, பலூன் உடைத்தல், நொண்டி அடித்தல், லக்கிக் கார்னர், ஹாக்கி மற்றும் கால்பந்து திறன் போட்டிகள் நடைபெற உள்ளன.  பிற்பகலில், ரூபினி குழுவினர்களின் பரதநாட்டியமும், புதுக்கோட்டை தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாண வர்களின் நாட்டுப்புறப் பாடல்களும், புதுக்கோட்டை மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளின் “பெண்களின் முன்னேற்றம்” நடனம் மற்றும் தமிழ் வளர்ச்சி நடனம், கிராமிய நடனம், பரதநாட்டியம், கலைச்சுடர்மணி முத்து முக மது குழுவினரின் நாட்டுப்புற தெம்மாங்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

10 நாட்களாக குடிநீர் வரவில்லை சிபிஎம், பொதுமக்கள் சாலை மறியல் 

தஞ்சாவூர், ஜூன் 25 -  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், கோவில்பத்து ஊராட்சிக்குட் பட்ட கிராமங்களுக்கு கடந்த பத்து தினங்களாக தண்ணீர் வராமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். இதுகுறித்து, அரசு  அலுவலர்களிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை காலை பூதலூர் நான்கு ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியக் குழு உறுப்பினர்கள்  மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.  தகவலறிந்த பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறி வழகன், சேக் தாவூத் மற்றும் அரசு அலுவலர்கள், காவல்து றையினர் போராட்டம் நடந்த இடத்திற்கு நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “உடனடியாக குடிநீர்  பிரச்சனை தீர்த்து வைக்கப்படும்” என உறுதி அளித்தனர்.  இதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 

குழந்தைகள் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூன் 25 - குழந்தைகள் பாதுகாப்பிற்காக அரசு அலுவலர்கள் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா அறிவுறுத்தி உள்ளார்.  மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கால முறை கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில்,  மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலர் நீதியரசர் இ.ராஜேந்திர கண்ணன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “பெண் குழந்தை கள் தங்கும், குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் பெண்  பணியாளர்களை மட்டும் பணியமர்த்த வேண்டுதல், அன்னை சத்யா அம்மையார் குழந்தைகள் இல்லத்தில் தங்கி  கல்வி பயின்று வரும் குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவர  வாகன வசதி ஏற்படுத்த வேண்டுதல், 19 குழந்தைகள் இல்லங் களில் தங்கி கல்வி பயின்று வரும் 20 குழந்தைகளுக்கு ஆதார் சான்று, 32 குழந்தைகளுக்கு சாதிச்சான்று மற்றும் 7  குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் பெற்று வழங்கிட நட வடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நடவ டிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  மேலும், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, காவல் துறை,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் குழந்தைகளின் பாதுகாப்பு நலனிற் காக செயல்படுத்தப்படும் திட்டங்களை தொடர்புடைய அரசு  அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். 

ஆட்சியர் அலுவலகக் கூட்டத்தில் பங்கேற்ற கல்வி அலுவலர்  மாரடைப்பால் உயிரிழப்பு

தஞ்சாவூர், ஜுன் 25 -  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டத்தில் திங்கட் கிழமை பங்கேற்க வந்த கல்வி அலுவலர் மாரடைப்பு கார ணமாக உயிரிழந்தார். தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே, சேவப்பநாயக்கன்வாரி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.தெய்வபாலன் (54). இவர், தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முதன் மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக (இடை நிலை) பணியாற்றி வந்தார். மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள் கிழமை பிற்பகல் நடைபெற்ற சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது,  திடீரென மயங்கி விழுந்த அவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே உயி ரிழந்து விட்டதாகத் தெரிவித்தார்.  அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப் படுகிறது. இதுகுறித்து, தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலை யத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்  பாசனத்திற்கு முறை வைக்காமல் தண்ணீர் விடக் கோரிக்கை

தஞ்சாவூர், ஜுன் 25 -  தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கோட்ட அளவி லான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சி யரின் உதவியாளர் பிரேம் குமார் தலைமை வகித்தார்.  இதில் விவசாயிகள் பேசுகையில், “குறுவை சாகு படியை முழுமையாக தொ டங்குவதற்கு அனைத்து கிளை வாய்க்கால்களிலும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். 40 நாட் களுக்கு முறை வைக்கா மல் தண்ணீர் திறந்து விட வேண்டும். வெண்ணாறில் இருந்து வெட்டாறு பிரியும்  இடத்தில் போக்குவரத்திற்கு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர். இதையேற்று தென் பெரம்பூரில் ரூ. 42 கோடியில் போக்குவரத்திற்கு உயர்  மட்ட பாலம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததற்கு நன்றி  தெரிவித்துக் கொள்கிறோம்.  குறுவை சாகுபடிக்கு எவ்வித தடையும் இல்லா மலும், சிபில் ஸ்கோர் பார்க்காமலும் கடன் கிடைக் கச் செய்ய வேண்டும். உழவுப் பணிகள் தொடங்க உள்ள நிலையில் உழவு மானியம் வழங்கினால் பய னுள்ளதாக இருக்கும். விவ சாயிகள் சாகுபடி செய்த  கரும்பில் நோய் தாக்கம்  உள்ளதால் அந்த விவசா யிகளுக்கு பெரிய அள வில் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களுக்கு உரிய இழப் பீடு வழங்க வேண்டும் அல்லது கரும்பிற்கு உண்டான கடனை தள்ளு படி செய்ய வேண்டும்.  ஜுன் 12 ஆம் தேதி, மேட் டூர் அணையில் தண்ணீர் திறந்து இன்னும் கடை மடை விவசாய பயன் பாட்டிற்கு தண்ணீர் சென்ற டையவில்லை. வேளாண் தொகுப்பை அனைத்து விவ சாயிகளுக்கும் வழங்க நட வடிக்கை எடுக்க வேண் டும்.  அனைத்து கூட்டுறவு  சங்கங்களிலும் விவசாயி களுக்கு உடனே பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மர வள்ளிக்கிழங்கிற்கு குறைந் தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.12,000 வழங்க வேண்டும்” என்றனர்.

விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்க உறுதி முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது

தஞ்சாவூர், ஜூன் 25 -  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம், செங்கிப்பட்டி சரகத்திற்குட்பட்ட வெண்டையம் பட்டி, கோட்டரப்பட்டி, மனையேறிப்பட்டி, ஆவா ரம்பட்டி, முத்துவீரன்கண்டியன்பட்டி உள்ளிட்ட 17 கிராம விவசாயிகளுக்கு 2024-2025 ஆம்  ஆண்டுக்கான பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்தும், உடனடியாக இன்சூ ரன்ஸ் தொகை வழங்கிடவும், மழை, வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக் கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி யும், நியாய விலைக் கடைகளில், பயோ மெட்ரிக் கைரேகை, கண்விழி படம் எடுக்கும்  போது பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படு கிறது. இதனை மாற்றி எளிய முறையில் பதிவு  செய்திட நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பூதலூர்  வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இது தொடர்பாக, ஜூன் 23 அன்று மாலை  பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், பூதலூர் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகள் சங்க மாவட்டச்  செயலாளர் என்.வி.கண்ணன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி,  சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பாஸ்கர் மற்றும் விவ சாயிகள், வேளான்மைத்துறை உதவி இயக்கு நர், வேளாண் அலுவலர்கள், பூதலூர் காவல்  ஆய்வாளர், பூதலூர் சரக வருவாய் ஆய்வாளர்,  செங்கிப்பட்டி சரசு வருவாப் ஆய்வாளர், வீர மரசன்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், “பயிர் அறுவடை பரிசோதனை செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாய நிலம் குறித்த விபரத்தினை பூதலூர் வேளாண்மை அலுவலகத்திற்குச் சென்று, வேளாண்மை அலுவலரால் மேற்பட்ட குறை கள் தொடர்பாக சமர்ப்பிக்கும் ஆவணங்களை பரிசீலித்து, குறைகள் நிவர்த்தி செய்யப்படும். பயிர் நிவாரணம் தொடர்பாக அரசாணை வரப் பெற்றவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் ரேகை பதிவில் உள்ள குறைபாடுகள் குறித்து  மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல்  தெரிவித்து, கலைய நடவடிக்கை மேற்கொள் ளப்படும்” என தெரிவிக்கப்பட்டது.   இதனைத் தொடர்ந்து, புதனன்று பூத லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடை பெறவிருந்த முற்றுகைப் போராட்டம் கைவிடப் பட்டது.