திருவாரூர்/பெரம்பலூர், ஜூன் 25 - வருவாய்த்துறை சங்கங்களின் கூட்ட மைப்பு (ஃபெரா) சார்பாக 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய, ஒட்டுமொத்த அரசியல் விடுப்பு போராட்டம் மற்றும் மாவட்ட தலை நகரில் பேரணி மற்றும் தர்ணா புதன் கிழமை நடைபெற்றது. திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங் களின் கூட்டமைப்பு (ஃபெரா) சார்பில் திருவாரூர் செஞ்சிலுவை சங்க பகுதியி லிருந்து 100-க்கும் மேற்பட்டோர் பேரணி யாக வந்து திருவாரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் விஜய் ஆனந்த் தலைமை வகித்தார். ஃபெரா அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினரும், மாநில பொருளாளருமான சோமசுந்தரம், கூட்டமைப்பு துறை மாவட்டச் செயலா ளர் கார்த்திகேயன், மாவட்டத் தலைவர் மகேஷ், மாவட்ட அமைப்பாளர் தட்சிணா மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் கோரிக்கை களை விளக்கி அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் மகாலிங்கம், வட்டச் செய லாளர் தம்பிதுரை, மாவட்ட ச்செயலாளர் செங்குட்டுவன், மாநிலச் செயலாளர் குரு சந்திரசேகர், ஓய்வூதிய சங்க மாநிலச் செயலாளர் அண்ணாதுரை, கூட்டுறவுத் துறை அலுவலர் சங்க நிர்வாகி விஜயன், மாநிலச் செயலாளர் இளவரசன், மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர். பெரம்பலூர் பெரம்பலூர் காந்திசிலை முன்பு தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழி யாக சென்று பாலக்கரை மாவட்ட ஆட்சி யர் நுழைவு வாயில் முன்பு தர்ணாவி ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாரதிவளவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த் துறை, நில அளவைத் துறையில் உள்ள அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தற்காலிக மற்றும் தொகுப்பு ஊதிய பணி நியமனங்களை தவிர்த்து உடனடியாக அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். வருவாய்த்துறை மற்றும் நில அளவைத் துறையில் பணி புரிந்து வரும் அலுவலர்களின் பணி பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப் பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.