வருங்கால வைப்பு நிதியிலிருந்து தானியங்கி முறையில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து(EPF) தானியங்கி முறையில் பணம் எடுக்கலாம் என்ற முறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஒரு லட்சம் வரை பணம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது பணம் எடுப்பதற்கான வரம்பு 1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.