கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களே அன நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கோவை, நீலகிரிக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.