சென்னை,ஜூன் 16- கடத்தை வழக்கில் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் ஜெயராமனைக் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் திருமண விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான ஜெகன் மூர்த்தி, கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் ஜெயராமன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் சிறுவனைக் கடத்திய வழக்கில் ADGP ஜெயராமனை கைது செய்து உடனடியாக சிறையில் அடைக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். இவரது உத்தரவின் பேரில் ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ முறையாக விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், விசாரணைக்குச் செல்லும்போது தனியாகத் தான் செல்ல வேண்டும். என கூறிய நீதிபதி, கட்டப்பஞ்சாயத்து செய்வதற்காகவா மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள் எனச் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.