india

img

தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு புதிய நிபுணத்துவ உறுப்பினர் நியமனம்....

புதுதில்லி:
தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக சத்யகோபால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தமிழக தலைமைச்செயலாளரான கிரிஜா வைத்தியநாதன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள்’ என்ற அமைப்புசென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தது.

கிரிஜாவுக்கு விதிகளின்படி போதிய அனுபவம் இல்லைஎன்று வாதிடப்பட்டது. முதலில் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகளும், கிரிஜா நியமனம் சரியல்ல என கருத்து தெரிவித்தனர்.ஆனால்,  இறுதி தீர்ப்பில், கிரிஜா வைத்தியநாதனை நியமித்தது செல்லும் என்றும்,  பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தகுதி உள்ளது என்றும் நியமனம் சரிதான் என தீர்ப்பளித்துள்ளது.நீதிமன்றத்தின்  தீர்ப்பு குறித்து  கடும் விமர்சனம் எழுந்தது.இதனால்  கிரிஜா வைத்தியநாதன், அந்த பதவியை ஏற்க மறுத்துமத்தியஅரசுக்கு கடிதம்எழுதினார். இதைத் தொடர்ந்து, தற்போது சத்யகோபால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர்  தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார்

;