india

img

200 போலி நிறுவனங்கள் மூலம் ஜிஎஸ்டி மோசடி

போலியான ஆவணங்களை கொண்டு உருவாக்கி யுள்ள நிறுவனங்களை ஒழிக்க ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் நாடு முழுவதும் சிறப்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஒரே பான் எண்ணை பயன்படுத்தி 200 போலி நிறுவனங்கள் மூலம் நாடு முழுவதும் ஜிஎஸ்டி மோசடி நடத்திய 6 பேரை ஜிஎஸ்டி புலனாய்வு  அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த  நிறுவனங்கள் போலி உள்ளீடு மூலம் வரி  கடன் பெறுவது மற்றும் வழங்குவது போன்ற மோசடி செயல்களில் ஈடுபட்ட தாக விசாரணை மூலம் தகவல் வெளி யாகியுள்ள நிலையில், கைது செய்யப் பட்டவர்கள் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா என செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும்  இந்த விவகாரம் தொடர்பாக பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் அகமதா பாத், சூரத் உள்ளிட்ட 14 இடங்களில் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.