india

img

அக்டோபரில் ரூ.12.11 லட்சம் கோடி யுபிஐ மூலம் பரிவர்த்தனை

கடந்த அக்டோபர் மாதத்தில் 12.11 லட்சம் கோடி ரூபாய் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக என்.சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NCPI) தரவுகளின் படி, அக்டோபர் மாதத்தில் 730 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. 12.11 லட்சம் கோடி ரூபாய் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் பரிவர்த்தனைகள் 73% அதிகரித்துள்ளது. அதேபோல், யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகையும் 57% அதிகரித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, நாட்டில் யுபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் முறை அதிகரித்துள்ளதாக தொழிற்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து தற்போது வரை யுபிஐ பரிவர்த்தனைகள் 488 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.