புதுதில்லி:
நாட்டில் விவாதிக்கப்படும் பல்வேறு பிரச்சனைகளில் மக்களின் கருத்து என்ன? என்பதை அறிய ‘ஏபிபி- சி-வோட்டர்’ நிறுவனங்கள் கடந்த ஜனவரி முதல் மே வரை நாடுமுழுவதும் கருத்துக் கணிப்பு ஒன்றைநடத்தி அதன் புள்ளிவிவரங்களை தற்போது வெளியிட்டுள்ளன.
இதில், புதிய நாடாளுமன்றம் கட்டுதல், 5 மாநிலத் தேர்தல் பிரச்சாரம், கும்பமேளாவுக்கு அனுமதி அளித்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மோடி அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று பரவியபோது, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடிஈடுபட்டது தவறு என்று நகரப் பகுதிகளில் 58 சதவிகிதம் பேரும், கிராமப்பகுதிகளில் 61 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர். தேர்தலையே தள்ளி வைத்திருக்கலாம் என்று 60 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் பக்தர்கள் இன்றி கும்ப மேளாவை நடத்தியிருக்க வேண்டும் என்றுநகரப்பகுதிகளில் 58 சதவிகிதம் பேரும், கிராமப்பகுதிகளில் 54 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசிகளை பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு அனுப்பியது குறித்த கேள்விக்கு, ‘இது தவறான நடவடிக்கை’ என்று நகரவாசிகளில் 54 சதவிகிதம் பேரும் கிராமவாசிகளில் 45 சதவிகிதம் பேரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போதைய கொரோனா சூழலில், புதிய நாடாளுமன்ற வளாகம்கட்டுவது சரிதானா? என்ற கேள் விக்கு 44 சதவிகிதம் பேர் சரியல்ல என்றும், 33 சதவிகிதம் பேர் சரிதான் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.இன்றைய மிகப்பெரிய பிரச்சனைஎது? என்ற கேள்விக்கு 36 சதவிகிதம் பேர் கொரோனா என்று பதிலளித்தனர். 18 சதவிகிதம் பேர் வேலைவாய்ப்பின்மை; 10 சதவிகிதம் பேர்விலைவாசி உயர்வு; 7 சதவிகிதம் பேர் ஊழல்; 5 சதவிகிதம் பேர் வறுமைஎன்று பதில் அளித்துள்ளனர்.எனினும், கொரோனா பிரச்சனையை மோடி- ராகுல் காந்தி ஆகிய இருவரில் யார் சிறப்பாக கையாள்வார் கள் என்ற கேள்விக்கு 63 சதவிகிதம் பேர் மோடியின் பெயரையே கூறிகுழப்பியுள்ளனர். ராகுல் பெயரை 14 சதவிகிதம் பேர்களே குறிப்பிட்டுள்ளனர்.