புதுதில்லி,ஜூன்.06- திருப்பதி தேவஸ்தான லட்டில் இருப்பது நெய்யல்ல ரசாயனம் கலந்த பாயில் என சிபிஐ ஆய்வறிக்கை சமர்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த போலே பாபா டெய்ரி நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு விநியோகித்தது நெய்யே இல்லை, அது ரசாயனம் கலந்த பாமாயில் என்பதற்கான ஆய்வறிக்கையை சிபிஐ உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
மோசடி மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகம் நடந்துள்ளதால் குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என சிபிஐ எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஜாமின் மீதான விசாரணை ஜூன் 16க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.