மும்பை,ஜூன்.06 - நகைக்கடன் தொடர்பான சு.வெங்கடேசன் எம்.பி கடிதத்திற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் பதில் அளித்துள்ளார்.
புதிய நகைக் கடன் "நகல்" விதிமுறைகள் எளிய, நடுத்தர மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கிற வகையில் அமைந்திருப்பது தொடர்பான சு.வெங்கடேசன் எம்.பி கடிதத்திற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் மல்ஹோத்ரா எழுதியுள்ள கடிதத்தில்; தற்போது வெளியிடப்பட்டு இருப்பது நகல் விதிமுறைகளே; உங்கள் கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும்; இது தொடர்பான மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்பட உள்ளது; சிறு கடன்தாரர்கள் உள்ளிட்டோர் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் பதிலளித்துள்ளார்.
ஏற்கனவே நான் மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து இப்பிரச்சினை மீதான தீர்வைக் கோரிய பின்புலத்தில் அவர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார். நகல் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் போது நாம் எழுப்பியுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படுமென்று நம்புகிறேன் என சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.