அவசர நிலைக் காலத்தில் சரணாகதி அடைந்தவர்கள் ஆர்எஸ்எஸ்-பாஜக
1975 அவசர நிலையின் போது ஒரு லட்சம் பேர் கைது செய்யப் பட்டனர். அதில் ஆயிரக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறையில் தள்ளப் பட்டனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் மட்டு மின்றி, கிழக்கு, மேற்கு, மத்திய கிழக்கு மாநிலங்க ளிலிருந்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை வர்கள் சிறையில் தள்ளப்பட்டனர்; அல்லது தலை மறைவு வாழ்வை நிர்ப்பந்தமாக ஏற்க வேண்டிய தாயிற்று.
அவசர நிலையின் உடனடிக் காரணம்
1971 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து, அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்ற சோசலிஸ்ட் கட்சித் தலைவர் ராஜ்நாராயணன் வழக்குத் தொடர் ந்தார். இந்திராகாந்தி பல்வேறு தேர்தல் முறை கேடுகளில் ஈடுபட்டார் என்ற அவரது குற்றச்சாட் டின் அடிப்படையில் 1974இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்திராகாந்தி முறைகேட்டில் ஈடுபட்டது உண்மை, ஆகவே அந்த தேர்தல் செல்லாது, அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதமராகவும் இருக்க முடி யாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்குச் சென்றபோதும், அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்தான் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
அடிப்படைக் காரணங்கள்
அன்று இந்தியா மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருந்தது. விலைவாசி உயர்வு, ஆட்குறைப்பு ஆகியவை மிகப்பெரிய பிரச்சனைகளாக இருந்தன. பெண்கள் வீதிகளில் வந்து போராட்டங்களை நடத்தினர்.
1974 ரயில்வே தொழிலாளர் போராட்
டம்: இந்த சமயத்தில் நடந்த மிக முக்கியமான மகத்தான போராட்டம் 1974 மே மாதம் நடை பெற்ற ரயில்வே தொழிலாளர் போராட்டம். மூன்று வாரங்கள் ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவில் ஒரு ரயில் கூட அன்று ஓடவில்லை. அத்தகைய மகத்தான போராட் டத்தை சுதந்திர இந்தியா அதுவரை சந்தித்த தில்லை. இந்த போராட்டம் முதலாளித்துவத்தையும், இந்திய பெருமுதலாளிகளை ஆதரிக்கும் இந்தி ராகாந்தி அரசையும் நிலைகுலைய வைத்தது. ஆயிரக்கணக்கான ரயில்வே தொழிலாளர்கள் சிறையில் தள்ளப்பட்டனர், கடுமையாகத் தாக்கப்பட்டனர், சிலர் கொல்லப்பட்டனர்.
ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள்: ஊழல்
பிரச்சனையை எதிர்த்து குஜராத்தில் “நவநிர் மாண்” இயக்கம் நடத்தப்பட்டது. பீகாரில் சோச லிஸ்ட் கட்சித் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராய ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மக்களிடையே காட்டுத்தீ போல் பரவியது. இத்தகைய அடிப்படைக் காரணங்களும், இந்திராகாந்தி தேர்தல் முடிவு செல்லாது என்ற தீர்ப்பும் இணைந்து அவசர நிலை பிரகடனப் படுத்தப்படுவதற்கு முக்கியக் காரணங்களாக இருந்தன.
மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டமும் வெற்றியும்
அவசர நிலை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு களுக்கும் குறைவாகவே அமலில் இருந்தது. தேர்தல் நடத்தப்பட்டால் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற உளவுத்துறை அறிக்கையை நம்பி இந்தி ராகாந்தி தேர்தலை அறிவித்தார். ஆனால் உள வுத்துறை அறிக்கைக்கு மாறாக காங்கிரஸ் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. இந்திராகாந்தி யும் அவரது மகன் - சர்வாதிகாரி போலச் செயல் பட்ட சஞ்சய்காந்தியும் தோற்கடிக்கப்பட்டனர். அந்த தேர்தல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல எதிர்க்கட்சிகளை ஒன்றி ணைத்ததால் காங்கிரஸ் கட்சியின் தோல்வி சாத்தியமானது. அவசர நிலைக் காலத்தில் மிகச் சரியான நேரத்தில் மக்கள் பக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நின்றதால் 1977இல் நாடாளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதி கரித்தது.
இடது முன்னணி அரசுகளின் உருவாக்கம்
1977 ஜூன் மாதம் மேற்கு வங்கத்தில் சட்ட மன்றத் தேர்தலில் மகத்தான தலைவர் தோழர் ஜோதிபாசு தலைமையில் முதன்முதலாக இடது முன்னணி ஆட்சி அமைக்கப்பட்டது. அதற்கு ஓரா ண்டுக்குப் பிறகு திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் இடது முன்னணி ஆட்சி அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுக ளுக்குப் பிறகு கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அமைக்கப்பட்டது. மூன்று அரசாங்கங்கள் செங்கொடி இயக் கத்தின் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அமைக்கப்பட்டதற்கு மிக முக்கியக் காரணம், அவசர நிலையை எதிர்த்து மக்கள் பக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நின்று போராடியது.
ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ‘மன்னிப்பு’ வரலாறு
இன்று அவசர நிலையின் 50வது ஆண்டு நினைவு தொடர்பாக பிரதமர் மோடியிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள சாதாரண பாஜக, ஆர்எஸ் எஸ் ஊழியர் வரை அவசர நிலையைக் கண்டித்து பல நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு என்ன உரிமை இருக்கி றது? என்ன அருகதை இருக்கிறது? பாஜகவின் தலைவராக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி இந்து பத்திரிகையில் 2000 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி எழுதிய கட்டுரை யில் ஆதாரப்பூர்வமான தகவல்களைத் தந்துள்ளார். தேவரஸின் மன்னிப்புக் கடிதம்: அவசரநிலைக் காலத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்க ளும் சிறையில் தள்ளப்பட்டனர். அன்றைய ஆர்எஸ்எஸ் தலைவர் தேவரஸ் இந்திராகாந்தி க்கு, மகாராஷ்டிரா முதல்வர் சவானுக்கு, வினோபா பாவேவிற்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில்: “தயவு செய்து ஆர்எஸ்எஸ்ஐ விட்டுவிடுங் கள். ஆர்எஸ்எஸ் ஊழியர்களை விடுதலை செய்யுங்கள். எங்கள் மீது எந்த அடக்குமுறை யையும் ஏவாதீர்கள். நீங்கள் எங்களை விடு தலை செய்தால் இந்த அவசர நிலைக் காலத்தை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கும். இந்திராகாந்தியின் 20 அம்சத் திட்டத்தை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கும். ஆகவே தயவு செய்து ஆர்எஸ்எஸ்ஐ விட்டு விடுங்கள், விடுதலை செய்யுங்கள்” -என்று மன்னிப்புக் கடிதம் எழுதியதாக சுப்பிரமணிய சாமி இந்து பத்திரிகையில் எழுதியுள்ளார்.
வாஜ்பாயின் மன்னிப்பு:
வாஜ்பாய் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். “எனக்கு உடல் நிலை சரியில்லை, சிறையில் என்னால் இருக்க முடியவில்லை, சிறையில் நான் துன்பப்படு கின்றேன், என்னைத் தயவு செய்து விடுதலை செய்யுங்கள் அல்லது பரோலிலாவது என்னை விடுங்கள்” என்று கேட்டார். உடனே இந்திராகாந்தி அவரை விடுதலை செய்தார். 19 மாத அவசர நிலைக் காலத்தில் ஒரு மாதம் தவிர மீதி 18 மாத காலம் அவர் வீட்டிலேயே இருந்தார்.
ஆர்எஸ்எஸ்ஸின் சரணாகதி ஆவணம்:
ஆர்எஸ்எஸ் சார்பாக 1976 டிசம்பர் மாதம் ஒரு மிக நீண்ட கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்தக் கடி தத்தில்: “நாங்கள் அவசர நிலையை ஆதரிக்கி றோம். 20 அம்சத் திட்டத்தை ஆதரிக்கிறோம். இந்திராகாந்தியை ஆதரிக்கிறோம். எங்களை மட்டும் விடுதலை செய்யுங்கள். விடுதலை செய்தால் ஆர்எஸ்எஸ் இந்திராகாந்தி பக்கம் இருப்போம்” என்று எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போட்டு இந்திராகாந்திக்கு அனுப்புவதற்கு முன்பாகவே அவசர நிலை அகற்றப்பட்டது. எனவே அந்தக் கடிதம் கையெழுத்துப் போடப்படாமல் நிறுத்தப் பட்டது.
சாவர்க்கரின் வாரிசுகள்
இப்படிப்பட்ட மன்னிப்பு, சரணாகதி அடைந்த வர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் “மன்னிப்பு திலகம்” என்று அழைக்கப்பட்ட சாவர்க்கரின் உண்மையான வாரிசுகள். சாவர்க்கர் பிரிட்டி ஷாருக்கு ஐந்து மன்னிப்புக் கடிதங்களை எழு தினார். அந்தமான் சிறையில் எவ்வளவோ பேர் இருந்தபோது, அதே சிறையில் இருந்த சாவர்க் கர் “என்னை விடுதலை செய்தால் நான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு காலம் முழுவதும் பணி செய்து கிடப்பேன்” என்று மன்னிப்புக் கடிதம் ஐந்து முறை எழுதி விடுதலை பெற்றார். அந்த சாவர்க்கரின் உண்மையான வாரிசுக ளாக தேவரஸும், வாஜ்பாயும், ஆர்எஸ்எஸ்ஸும் இந்திராகாந்தியிடம் சரணாகதி அடைந்தார்கள். இப்படிச் சரணாகதி அடைந்தவர்களுக்கு அவசர நிலையைக் கண்டித்துப் பேசும் உரிமை, அரு கதை என்ன இருக்கிறது?
மோடியின் அறிவிக்கப்படாத அவசர நிலை
ஆர்எஸ்எஸ்-பாஜகவின் 11 ஆண்டுகள் அறி விக்கப்படாத அவசர நிலைக் காலம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகிறது. முதல்வர்களைச் சிறையில் தள்ளிய கொடுமை: இந்தியாவில் முதன்முதலாக எதிர்க் கட்சியைச் சேர்ந்த இரண்டு முதல்வர்கள் சிறை யில் தள்ளப்பட்டனர். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் ஆதிவாசி மக்களின் தலைவர் ஹேமந்த்சோரன் - இவர்கள் இரு வரும் பொய்யான குற்றச்சாட்டுகளில் சிறையில் தள்ளப்பட்டனர். முதல்வர்களுக்கே இந்தக் கதி என்றால், சாதாரண மக்களின் கதி என்ன? இரண்டு முதல்வர்களைச் சிறையில் வைத்து அந்த மாநிலச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள் வது இந்தியாவில் எப்போதாவது நடந்திருக்கி றதா? ஆனால் மோடி அரசு இதைச் செய்திருக்கிறது. எதிர்ப்பாளர்கள் மீது அடக்குமுறை: நரேந்திர மோடி, அமித் ஷா அல்லது பாஜகவை எதிர்த்தால் யாராக இருந்தாலும் அவர்கள் சிறை யில் தள்ளப்படுகிறார்கள். அதுவும் பொய்யான குற்றச்சாட்டில். இன்று நான்கு ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருப்பவர்கள் உள்ளனர். இவர்கள் மீது எந்தக் குற்றப் பத்திரிகையும் இல்லை, விசாரணை இல்லை, பெயிலும் இல்லை. ஆனால் நான்கு ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள். ஊடகச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்: பத்திரிகையாளர்கள் இந்த அரசாங்கத்தை எதிர்க்கிறார்களா? அவர்களும் சிறையில் தள்ளப் படுகிறார்கள். அதனால்தான் உலகத்தில் பத்திரி கைச் சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் இந்தியா 151வது இடத்தில் ஒரு மோசமான சூழ்நிலையை மோடி அரசாங்கத்தின் தலை மையில் ஏற்பட்டிருக்கிறது. இன்று பல பத்திரிகையாளர்கள் அவரது ஆதரவாளராக மாறியுள்ளனர். அவர்களை எதிர்த்துப் பேசினால் சிபிஐ வருகிறது, அம லாக்கத்துறை வருகிறது, வருமான வரித்துறை வருகிறது. ஆகவே பல ஊடகங்கள் அவர்களை எதிர்த்துப் பேசத் தயங்குகின்றன. அரசியலமைப்பு மீதான தாக்குதல்: ஜம்மு-காஷ்மீர் இந்தியாவோடு இணையும் போது நாம் கொடுத்த வாக்குறுதி சிறப்பு அந்தஸ்து. அந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய் யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மக்களிடம் எதுவும் கேட்கவில்லை. நீதித்துறை மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தேர்தல் ஆணையம் மீது தாக்குதல் நடத்தப் படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்று தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மை இவையெல்லாம் இன்று தாக்குதலுக்குள்ளாக்கப்படுகின்றன. பிளவுவாத அரசியல்: இந்து-முஸ்லிம் பிளவுவாதம் ஏற்படுத்தப்படுகிறது. சாதியப் பிளவுவாதம் ஏற்படுத்தப்படுகிறது. மொழியின் பெயரால் பிளவு ஏற்படுத்தப்படுகிறது. பல மாநிலங்களில் இன்று இந்தித் திணிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் பொறுப்பு
இன்னும் பத்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கப் போகிறீர்கள். அந்தச் சட்ட மன்றத் தேர்தல் மிகமிக முக்கியமானது. நிச்சய மாக ஜனநாயகத்தைப் பாதுகாக்க, மதச்சார்பின் மையைக் காக்க அந்தத் தேர்தலைப் பயன் படுத்த வேண்டும். இன்று திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இருக்கிறது. அதில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கிறது. அந்தக் கூட்டணி சட்டமன்றத்தில் மீண்டும் மகத்தான வெற்றி பெற வேண்டும்.
தமிழ்நாட்டின் வரலாற்றுச் சாதனை
தமிழ்நாடு கடந்த காலத்தில் பல வரலாறுக ளை நிகழ்த்தியுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39க்கு 39 வெற்றி பெற்றது. அதேபோல் பாண்டிச்சேரியில் வெற்றி பெற்றது. இந்தியாவில் பாஜகவிற்கு ஒரு நாடாளு மன்றத் தொகுதி கூடத் தராத மாநிலம் தமிழ்நாடுதான். அத்தகைய மகத்தான வெற்றியைத் தந்த, பாஜகவிற்குத் தோல்வியைத் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு செவ்வணக்கம். அதேபோன்ற ஒரு வெற்றியை சட்டமன்றத்திலும் வழங்க வேண் டும். அதன் மூலம் பாஜகவிற்குப் பாடம் கற்றுத்தர வேண்டும். பாஜகவோடு சேர்ந்திருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.
காலத்தின் கட்டாயம்
அவசர நிலையின் 50வது ஆண்டு நினைவு தொடர்பாக அதன் அரசியல் பாடங்களை இந்தியா முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. அவசர நிலைக் காலத்தை விட மிக மோசமான சூழல் இன்று நிலவிக் கொண்டிருக்கிறது. அறிவிக்கப்படாத கொடூர மான எதேச்சதிகார சூழல் இன்று அமலாக் கப்பட்டுள்ளது. அவசர நிலையில் சரணாகதி அடைந்த ஆர்எஸ்எஸ்-பாஜக சக்திகள் இன்று ஜனநாய கத்தைப் பற்றிப் பேசுவது கேலிக்குரியது. அவர்க ளுக்கு அந்த அருகதை இல்லை. மாறாக, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர நிலையை எதிர்த்து மக்கள் பக்கம் நின்று போராடியதால்தான் பின் னாளில் மூன்று மாநிலங்களில் இடது முன்னணி அரசுகள் அமைக்க முடிந்தது. இன்றைய அறிவிக்கப்படாத அவசர நிலை யை எதிர்த்துப் போராடுவது காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை ஜன நாயகத்தையும் மதசார்பின்மையையும் காக்கும் பொறுப்பை ஏற்று, பாஜக-அதிமுக கூட்டணி யைத் தோற்கடித்து வரலாற்றுப் பொறுப்பை நிறை வேற்ற வேண்டும். திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற “அவசர நிலையின் 50வது ஆண்டும், மோடி அரசின் அறிவிக்கப்படாத அவசர நிலையும்” என்ற கருத்தரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே ஆற்றிய உரையின் அம்சங்கள். தமிழில் : அ.அன்வர் உசேன் உரைகள் தொகுப்பு : எஸ்.விஜயகுமார்