india

img

தில்லியில் பதற்றம் உண்ணாவிரதம் இருந்த ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

தில்லி மாநில தண்ணீர் பிரச்சனை யை தீர்க்கக் கோரியும், அவ்வாறு தீர்க்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக பிரதமர் மோடிக்கு தில்லி நீர்வளத்துறை அமைச்  சர் அதிஷி கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த கடிதத்திற்கு பிர தமர் மோடி எவ்வித விளக்கமும் அளிக்  காத நிலையில், அறிவித்தது போலவே  தில்லியில் அமைச்சர் அதிஷி வெள்ளி யன்று (ஜூன் 21) காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தை தொடங்கினார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம்  தொடர்ந்து 5ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், செவ்வாயன்று காலை அமைச்சர் அதிஷிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தில்லி  லோக் நாயக் ஜெயப் பிரகாஷ் நாராய ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். 

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ள அதிஷிக்கு ரத்தத்தில் உள்ள  சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் சீரற்ற நிலைக்கு சென்றதாகவும், ரத்தத்  தில் சர்க்கரையின் அளவு குறைந்ததை  அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. 

உண்ணாவிரதம் இருந்த ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி அவசர சிகிச்சை பிரி வில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தில்லி யில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.