india

img

முக்கியத் துறைகளை கைப்பற்றும் முனைப்பில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்

புதுதில்லி, ஜுன் 6 - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட் டணி பதவியேற்க உள்ள நிலையில் முக்கிய துறை களை கேட்டு சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகி யோர்  நச்சரிக்கத் துவங்கி யுள்ளதாக தெரிகிறது.

போதுமான அளவில் பெரும்பான்மை கிடைக்காத தால், பாஜக இந்த முறை தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழலில் உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு தான் பாஜக ஆட்சி அமைக்க வேண்டிய சூழலில் உள்ள நிலையில், பாஜகவிற்கு அடுத்து அதிக இடங்களை வென்ற சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் (16), நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (12) தய வில் மோடி மீண்டும் பிரதமர் பதவியில் அமர உள்ளார். 

முக்கிய துறைகளை கேட்கிறார்கள்

முன்னதாக புதனன்று தேசிய ஜனநாயக கூட்டத் தில் பாஜக ஆட்சிக்கு ஆதர வளிக்க வேண்டுமானால் மக்களவை சபாநாயகர், ரயில்வே, சட்டம்,நிதி, தகவல் தொழில்நுட்பம், உள்துறை, விவசாயம், வெளியுறவுத்துறை போன்ற முக்கிய துறைகளை வழங்க வேண்டும் என  தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை கோரிக்கை விடுத்துள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.

வேளாண்துறை

முக்கிய துறைகளைக் கேட்டு பாஜகவிற்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் கடும் நெருக்கடி அளித்து வரும் நிலையில், கர்நாடகாவில் 2 தொகுதிகளை மட்டுமே வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தங்களுக்கு வேளாண்துறை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதே போல லோக்  ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வானும் தனக்கு கேபினெட் அமைச்சர் பதவி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. இவரிடம் 5 இடங்கள்உள்ளன.

கை விரிக்கும் பாஜக

கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை வைத்தாலும் சபாநாயகர், ரயில்வே, சட்டம், நிதி, தகவல் தொழில் நுட்பம், உள்துறை, விவசா யம், வெளியுறவுத்துறை போன்ற முக்கிய துறை களைத் தர வாய்ப்பில்லை என பாஜக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய துறைகளின் இணை யமைச்சர் பொறுப்பு வேண்டுமானால் பெற்றுக் கொள்ளுங்கள் என பாஜக கூறியதாக செய்திகள் கசிந்துள்ளன. 

நிதிஷ் குமார் நிபந்தனை

இது மட்டுமின்றி, புத னன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்ட த்தில் பீகார் மாநில முதல்வ ரும், ஐக்கிய ஜனதாதளத் தின் தலைவருமான நிதிஷ் குமார் பாதுகாப்புப் படை களில் ஆள் சேர்க்கும் “அக்னி பாதை” திட்டத்தை மறுபரி சீலனை செய்யவேண்டும் என நிபந்தனை விதித்துள்ள தாக தெரிகிறது.

இது மட்டுமின்றி, புத னன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்ட த்தில் பீகார் மாநில முதல்வ ரும், ஐக்கிய ஜனதாதளத் தின் தலைவருமான நிதிஷ் குமார் பாதுகாப்புப் படை களில் ஆள் சேர்க்கும் “அக்னி பாதை” திட்டத்தை மறுபரி சீலனை செய்யவேண்டும் என நிபந்தனை விதித்துள்ள தாக தெரிகிறது.