india

img

விலைவாசி உயர்வு குறித்து ஏன் மோடி பேசுவதில்லை? ராகுல் காந்தி கேள்வி....

புதுதில்லி:
தேர்வு நேரத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடுவதுபோல், பெட்ரோல், டீசல் விலை உயரும் போது ஏன் பிரதமர் மோடி ஏதும் பேசுவதில்லை என்று காங்கிரஸ்துணைத்தலைவர் ராகுல் காந்தி எம்.பி., கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்க பரிக்‌ஷா பே சர்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். 4-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.இந்நிலையில் மாணவர்களுடன் தேர்வுநேரத்தில் கலந்துரையாடும் பிரதமர் மோடி,பெட்ரோல், டீசல் விலை உயர்வின்போது மவுனமாக இருப்பது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்,இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட்டரில் , “ மத்திய அரசின் வரிவசூலால் ஒரு காருக்கு பெட்ரோல், டீசல்நிரப்புவது என்பது தேர்வைவிட எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. பெட்ரோல், டீசல்விலை குறித்து ஏன் பிரதமர் மோடி பேசுவதில்லை. பெட்ரோல், டீசலுக்காக செலவிடும் தொகை குறித்தும் மோடி பேச வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஆனால் பிரதமர்மோடி இதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என்று பொதுமக்களும் வாலிபர்களும் சாடியுள்ளனர்.