தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வா யன்று ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி யில் பேசும்போது, உங்கள் எண்ணம், பார்வை எப்படி இருந்தாலும் அரசின் முடிவை அமல்படுத்து வது மட்டுமே குடிமைப் பணி அதிகாரியின் கட மையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
குடிமைப்பணி அதிகாரிகள் தங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட கொள்கைகளை பணியில் வெளிப்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறி யிருக்கிறார். இந்த அறிவுரை குடிமைப் பணியா ளர்களுக்கு மட்டும்தானா? அவருக்கு பொருந் தாதா? என்கிற கேள்வி எழாமல் இல்லை.
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான முதல் நிலை முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்று நேர்காண லுக்கு தயாராகி வருபவர்கள் உடனான கலந்துரை யாடல் நிகழ்ச்சியாக ‘எண்ணித்துணிக’ என்ற தலைப்பில் பேசும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் பிரதிநிதியாக ஆளுநர் தமிழ்நாட்டில் செயல்பட்டாலும் அவர்தான் தமிழ்நாடு அரசின் அலுவல் பூர்வமான தலைவர். மாநிலத்தில் ஆட்சி செய்யும் அரசுக்கு அவரே தலைவர் என்பதை உணர்ந்திருந்தால் ஆளுநர் உரையின்போது, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக் கேற்ப அரசு தயாரித்த அறிக்கையை விட்டுவிட்டு சொந்தமாக தனியாக வாசித்திருக்க மாட்டார்.
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தமிழக அரசு மட்டுமே அழைக்கிறது. நிர்வாக ரீதியாக ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறு இல்லை. அதே நேரம் சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் அவ் வாறு குறிப்பிடுவது தவறு என்று கூறியிருக்கிறார்.
ஒன்றிய அரசு என்பது அரசியல் சட்ட ரீதி யாக அமைக்கப்பட்டுள்ள யூனியன் கவர்ன் மெண்ட் என்பதன் தமிழ் வடிவமே. இதில் சிறுமைப் படுத்துவது எங்கே நுழைகிறது.
இந்தியா என்பது பல கலாச்சாரம், பல இனக் குழுக்கள் உள்ள நாடு என்று கூறும் ஆளுநர் அவரது தில்லி எஜமானர்களான ஒன்றிய ஆட்சி யாளர்களின் அரசியலான ஒற்றைத்துவத்தை திணிக்கின்ற முயற்சியாக செய்வதையெல்லாம் நியாயப்படுத்த முயற்சிப்பது ஏன்?
அவர் மாநில ஆட்சியின் அரசுமுறை தலைவர் என்ற பொறுப்பை மறந்து ஒன்றிய ஆளும் கட்சியான பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளர் போல செயல்படுவது அரசியல் சட்ட விதிமீறல் அல்லவா? அதுமட்டுமின்றி, இன் னொன்றும் கூறியிருக்கிறார். அதாவது சில கொள்கைகளில் ஒன்றிய அரசும், மாநில அரசும் வேறுபடும் பட்சத்தில் ஒன்றிய அரசு சொல்வ தையே கேட்க வேண்டும் என்று கூறுவது மாநி லத்தின் ஆட்சி நிர்வாகத்தை சீர்குலைப்ப தல்லவா?
மத்திய ஆட்சிப் பணிக்காக தேர்வு செய்யப் பட்டாலும் அவர்கள் மாநில அரசின் நிர்வா கத்தில்தானே செயல்படுகிறார்கள். அவர்களை விதிமீறச் சொல்வது சட்டவிரோதம் இல்லையா? ஆளுநர் தனது தனிப்பட்ட கொள்கையை ஆட்சி நிர்வாகத்தில் திணிப்பது தவறு. அவர் கூறிய அறிவுரையை அவர் பின்பற்றினால் நாட்டுக்கு நல்லது.