விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க 14ஆயிரம் கோடி ரூபாயில் ஏழு திட்டங்கள் என்று ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திங்களன்று தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதா வது பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குத்தான் இவ்வளவு ‘பில்டப்’ கொடுத்தி ருக்கிறார் அஸ்வினி வைஷ்ணவ்.
இந்தத் திட்டங்களால் விவசாயிகளின் வரு மானம் எப்படி அதிகரிக்கும்? உண்மையில் இந்தத் திட்டங்கள் விவசாயிகளுக்கு பெரிதாக எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை. வேளாண் துறை சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிடைக்கும். ஓரிரு அரசுத்துறைகள் மூலம் பாஜக வின் இந்துத்துவா கல்விக் கொள்கையைத் திணிப்பதற்கு அவை பயன்படும். இதில் விவசாயி களின் வாழ்வாதாரம் மற்றும் வருவாய் அதிக ரிப்புக்கு வாய்ப்பு எங்கே இருக்கிறது? விவசாயி கள் ஏமாற மாட்டார்கள்.
விவசாயிகளின் நீண்ட கால முக்கிய கோரிக் கையான விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டு வருவது பற்றி பிரதமர் வாயைத் திறப்பதில்லை; சிறு துரும் பையும் அசைப்பதில்லை. ஒருமுறை கடன் தள்ளு படி செய்ய வேண்டும் என்பது பற்றியும் போராட்டக் களத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்க ளுக்கும் உ.பி.யில் அப்போதைய ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றிக் கொன்ற விவசாயிகளின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்குவது பற்றியும் பேசுவதேயில்லை.
இந்நிலையில் திடீரென விவசாயிகள் மீது அக்கறை கொண்டுள்ளது போல காட்டிக் கொள்வதன் பின்னணி என்ன? ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் தான் காரணம். பஞ்சாப், ஹரியானா மாநில எல்லையான ஷம்பு பகுதியில் விவசாயிகள் 200 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலை யில் உச்சநீதிமன்றம் விவசாயிகளின் பிரச்சனை களைத் தீர்க்க நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட்டிருந்தது.
தற்போது முன்னாள் நீதிபதி நவாப் சிங் தலை மையில் உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அத்துடன் அதன் முதல் கூட்டம் ஒரு வாரத்துக்குள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. சௌத்ரி சரண்சிங் ஹரியானா வேளாண் பல்கலை.துணைவேந்தர் பி.ஆர்.கம்போஜிடம் நிபுணர் ஆலோசனை பெறுமாறும் குழுவுக்கு வழிகாட்டியுள்ளது. அதே நேரத்தில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த நிலையிலேயே ஒன்றிய அரசு மேற் கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் பாஜக கூட்டணி அரசுக்கு எதிரான மக்களின் கோபாவேசத்தையும் மல்யுத்த வீராங் கனை வினேஷ் போகத்துக்கு இழைத்த அநீதிக்கு எதிரான அலையையும் சமாளிக்கவே இந்த திசை திருப்பும் வேலையில் இறங்கியுள்ளது. ஆயினும் இவை எதுவும் பாஜகவுக்கு பயனளிக்கப் போவதில்லை.